'டோல்கேட்டுகள் அடித்து நொறுக்கப்படும்'

'இண்டியா கூட்டணி வெற்றி பெற்றால், தமிழகத்தில் உள்ள 64 டோல்கேட்டுகள் அடித்து நொறுக்கப்பட்டு, நீக்கப்படும்' என, த.வா.க., தலைவர் வேல்முருகன்பேசினார்.

விழுப்புரம் லோக்சபா தொகுதியில் இண்டியா கூட்டணியில் போட்டியிடும் வி.சி., வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து கோலியனுார் பகுதியில் த.வா.க., தலைவர் வேல்முருகன் பேசியதாவது:

புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் 40 தொகுதிகளிலும், 'இண்டியா' கூட்டணி வெற்றி பெற்று, மாற்றத்தை ஏற்படுத்த இந்த கூட்டணியை முதல்வர் ஸ்டாலின் அமைத்துள்ளார்.

விழுப்புரத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளாக ரவிக்குமார் எம்.பி.,யாக இருந்தபோது, மரங்கள் வெட்டப்படவில்லை. 'இண்டியா' கூட்டணி வெற்றி பெற்றால், தமிழகத்தில் உள்ள 64 டோல்கேட்டுகள் அடித்து நொறுக்கப்பட்டு, நீக்கப்படும். வன்னிய மக்கள் ஓட்டு போடாமல் எந்த தலைவரும் தமிழகத்தில் பதவிக்கு வர முடியாது.

இவ்வாறு அவர் பேசினார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)