'டைட்டானிக் கப்பலை உடைத்த பழனிசாமி'

பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து, நடிகர் செந்தில் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். அவர் பேசியதாவது:

இந்த தேர்தலோடு பழனிசாமியை முடிச்சிடுங்க. அதன்பிறகு நம்ம மோடி தான். ஜெயலலிதாவும், எம்.ஜி.ஆரும் டைட்டானிக் கப்பல் போல் கட்சியை வைத்திருந்தனர். அந்த கப்பலை ஓட்ட தெரியாமல் ஓட்டி உடைத்து விட்டார் பழனிசாமி. அ.தி.மு.க., நாசமாக போய்விட்டது, எனக்கு வருத்தமாக உள்ளது.

யார் யாரோ வந்து, என்னவோ சொல்வாங்க. ஒரு காதில் நெய் ஊற்றுகிறோம்; தேனாக மறுபக்கம் பாயும்பாங்க. அதை நம்பாதீங்க. யார் என்ன சொன்னாலும், ஒரே முடிவாக இருங்க. தாமரைக்குத்தான் ஓட்டு போடுவேன் என்பதில் முடிவாக இருங்க.

மோடி நமக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம். விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 ரூபாய் நேரா வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இவர்கள் கையில் கொடுத்தால், அலுவலர்களிடம் பாதி போய் விடும்.

இவ்வாறு, அவர் பேசினார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)