தங்கச்சுரங்கம் வெட்டியெடுத்து அஞ்சு பவுன் தருவேன்!

கோவை லோக்சபா தொகுதிகளில் போட்டியிட, கோவை செல்வபுரத்தைச் சேர்ந்த துரைசாமி,72, நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

பின், அவர் கூறியதாவது:

சொந்த ஊர் கோபி. வங்கி கணக்கில் 1 லட்சம் ரூபாய் இருக்கிறது. பிரதமராக ராஜிவ் இருந்தபோது, ராஜினாமா செய் என போராட்டம் நடத்தி சிறைக்குச் சென்றவன்.

நீலகிரி மாவட்டம் தேவலாயாவில் உள்ள தங்கச்சுரங்கத்தை வெட்டியெடுத்து, பெண் குழந்தைகள் முதல், 100 வயது மூதாட்டி வரை அனைவருக்கும் ஐந்து பவுன் தங்கம் தருவேன். பெரும் பணக்காரர்களிடம் இருந்து பூமியை பெற்று, ஆளுக்கு அரை ஏக்கர் தரப்படும். இதற்கு காவல்துறை, ராணுவம் ஒத்துழைக்க வேண்டும்.

இவ்வாறு, அவர் கூறினார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)