ஊழல் திமுக ஆட்சியை அகற்றுவோம்: மதுரையில் பியூஷ் கோயல் பேட்டி
மதுரை: ''ஊழல் திமுக ஆட்சியை அகற்றுவோம் '' என மதுரையில் நிருபர்கள் சந்திப்பில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.மதுரையில் நாளை பிரதமர் மோடி தே.ஜ., கூட்டணியின் பிரசார பொதுக் கூட்டம், மத்திய அரசின் நகாய், ரயில்வே திட்டங்கள் துவக்க நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இதற்காக வரும் பிரதமர் திருப்பரங்குன்றம் கோயிலில் தரிசனம் செய்யவும் ஏற்பாடுகள் நடக்கின்றன. பிரதமரின் பொதுக் கூட்டம் ரிங்ரோடு அருகே மண்டேலா நகர் மைதானத்தில் நடக்கிறது. இதற்காக மேடை அமைக்கும் பணிகள் நடக்கின்றன. இந்த கூட்டத்தில் பங்கேற்க மதுரை வந்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நிருபர்களிடம் கூறியதாவது: ஊழல் திமுக ஆட்சியை அகற்றுவோம். ஜெயலலிதாவின் முதுகில் ஓ.பன்னீர்செல்வம் குத்திவிட்டார். தமிழக மக்கள் ஓ.பன்னீர்செல்வத்தை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். தமிழர்களின் கலாசாரம், பாரம்பரியம், இறையாண்மையை திமுக அரசு கெடுத்து விட்டது. திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றாதது அவமானம். அதிமுக- பாஜ கூட்டணி குடும்பம் போல் உள்ளது. தமிழகத்தில் மீண்டும் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சி அமையும். தேஜ கூட்டணியை மக்கள் வெற்றி பெற செய்வார்கள். இவ்வாறு பியூஷ் கோயல் கூறினார்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
வாசகர்கள் கருத்துகள் ( 7 )
Piyush ji...the quote is well suitable for your alliance too...and this challange won't work out by keeping an ex dravidian as a state president . Need of the hour is Annamalai ji
மத்திய அமைச்சரின் நகைச்சுவை உணர்வு ரசிக்கும்படி உள்ளது!
5 வருடமாக என்ன செய்து கொண்டிருந்தாய்???திருடர்கள் மு... டாள்கள் கயவர்கள் கட்சியை 5 வருடம் முன்னாடியே அடலீஸ்ட் 4 வருடம் முன்னாடியே அடிச்சு துரத்தியிருக்கலாமே???ஏன் செய்யவில்லை??
ஊழல் செய்ய சொந்த கட்சியில் ஆள் இல்லாததால் அதிமுகவில் இருந்து ஊழல் மன்னர்களை இறக்குமதி செய்து வரலாறு காணாத ஊழல் செய்து வரும் ஊழல் திமுக இனி ஊதிமுக என்று அழைக்கப்படும்
துணைக்கு தேர்தல் கமிஷனுக்கே 200 கோடி லஞ்சம் கொடுத்து சிக்கியவர் . ஊழல் பத்தி பேசுறீர்?
பியூஷ் கோயல் அவர்களே 70 தொகுதிக்கு குறைவா ஒத்து கொள்ளாதீர்கள் , அப்புறம் உங்க கெத்து என்ன ஆவது , நீங்கள் 70 வாங்கினால் தான் DMK அந்த 70 யிலும் வெற்றி வாகை சூடி CAKEWALK ஆக வெற்றி பெற வசதியா விடாதீர்கள் 90 லக்ஷியம் 70 நிட்சயம் , ஜெய் பாரத்
ஆடி காத்துல அம்மி கல்லே பறந்துடும், இதிலே திருட்டு த்ரவிஷ ஊழல்மிகு முதல் குடும்ப பிரைவேட் கம்பெனி கட்சி பறந்துடாதா? திருபரங்குன்ற முருகன் பார்த்துக் கொண்டிருக்கிறான் குமாரு.
மேலும் செய்திகள்
60 வயதாவதால் வாய்ப்பு கொடுங்கள்: தி.மு.க., நிர்வாகி உருக்கமான கடிதம்
மார் 04, 2026 05:20 am