ஓ.பி.எஸ்.,க்கு கிடைக்கப்போவது என்ன; அதிமுகவினர் ஆர்வம்
நமது நிருபர்
சில நாட்களுக்கு முன், பன்னீர்செல்வம் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, 'தி.மு.க., கூட்டணியில் அ.தி.மு., தொண்டர்கள் உரிமை மீட்பு கழகத்துக்கு சீட் வேண்டும்' என கேட்டார். 'அதெல்லாம் வேண்டாம்; நீங்கள் தி.மு.க.,வில் இணைந்து கொள்ளுங்கள்.
உங்களை கட்சி மரியாதையாக நடத்தும். உங்களோடு சேர்த்து இருவருக்கு சீட் வழங்கப்படும். அடுத்து தி.மு.க., வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்பட்சத்தில், நீங்கள் தான் சபாநாயகராக இருக்க வேண்டும்' என கூறியுள்ளார். இந்த விஷயம் அரசல் புரசலாக, அ.தி.மு.க., தலைமையையும் எட்டியுள்ளது. இது உண்மையா, ஸ்டாலின் அப்படி சொன்னாரா என்பதை அறிந்து கொள்ளுமு் முயற்சியில் அதிமுக நிர்வாகிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
Advertisement
திமுகவுக்கு ஜால்றா அடிக்கறவரைக்கும் தினமும் மூன்று வேலை சாப்பாடு. ஜால்றா அடிப்பதை நிறுத்தியவுடன் கல்தா...
ஓ.பி.எஸ்க்கு உடனடியாக பாக்கெட்டில் வைக்கும் சைசில் உதயநிதியின் போட்டோ தரப்படும்.
அதெப்படி இப்போதே சொல்ல முடியும்? அதிமுகவிற்கு சம பலம் உள்ளதே. அவர்கள் ஆட்சிக்கு வந்து விட்டால் இவர் எப்படி சபாநாயகர் ஆக முடியும்
சட்டசபையில் யார் கும்பிடு போட்டாலும் அது சபாநாயகர் என்ற பதவிக்குத்தான். தனிப்பட்ட நபர்களுக்கு அல்ல. ஒரு வேளை தி.மு.க வெற்றி பெற்று,ஒரு வேளை பன்னீர் சபாநாயகராக இருந்தால் அனைவராலும் போடப்படும் கும்பிடு சபாநாயகர் பன்னீருக்குத்தான்!
அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா என்று சொல்லலாம் அது வெறும் கதை அதை நம்பி இவர் மூழ்கிவிட்டாரே என்றுதான் கவலையாக இறுக்கிறது

வைகோவிற்கு போட்டியா இன்னொரு ஜால்ரா திமுகவில் வந்துட்டாம்பா, பேரு OPS ஆம்.