Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு

Advertisement


 தி.மு.க., தேர்தல் பிரசார பொதுக்கூட்டம்

 தி.மு.க., தேர்தல் பிரசார பொதுக்கூட்டம்

விழுப்புரம்: விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில் தமிழ்நாடு தலைகுனியாது என்ற தலைப்பில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது.

விழுப்புரம் நகராட்சி திடலில் நடந்த கூட்டத்திற்கு தி.மு.க., மாநில ஆதிதிராவிடர் நலக்குழு இணைச் செயலாளர் புஷ்பராஜ் வரவேற்றார். மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் கண்ணப்பன், முன்னாள் எம்.எல்.ஏ., மாரிமுத்து, சுரேஷ், பிரேமா குப்புசாமி, விழுப்புரம் நகர செயலாளர்கள் சக்கரை, வெற்றிவேல், ஒன்றிய செயலர்கள் தெய்வசிகாமணி, முருகவேல், பிரபாகரன், ஜீவா, ராஜா, சந்திரசேகர், ஒன்றிய சேர்மன்கள் வா சன், சச்சிதானந்தம், நகர சேர்மன் தமிழ்செல்வி பிரபு, பொதுக்குழு உறுப்பினர்கள் சம்பத், பஞ்சநாதன் முன்னிலை வகித்தனர்.

தி.மு.க., மாநில மருத்துவரணி செயலாளர் எழிலன் நாகநாதன் எம்.எல்.ஏ., விழுப்புரம் மத்திய மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., தொகுதி பொறுப்பாளர் துரை சரவணன் சிறப்புரையாற்றினர். தி.மு.க., அரசின் சாதனைகள் குறித்தும், தொடர்ந்து மக்கள் நல திட்டங்கள் தொடர மீண்டும் தி.மு.க.,விற்கு ஆதரவளி க்க வலியுறுத்தியும் பொதுக்கூட்டத்தில் பேசினர்.

மத்திய மாவட்ட அணி நிர்வாகிகள் ஸ்ரீவினோத், கபாலி, தவமணி, அன்புமணி, செந்தில்குமார், விஸ்வநாதன், செல்வகுமார், செல்வி, சாருலதா, பாலாஜி, சிவா, வெங்கடே சன், ராஜா, ஒன்றிய துணை தலைவர் உதயகுமார்.

மாவட்ட கவுன்சிலர்கள் தமிழ்ச்செல்வி கேசவன், வனிதா அரிராமன், தகவல் தொழில் நுட்ப அணி ஆனந்தராஜ், கவுன்சிலர்கள் புருஷோத்தமன், மணவாளன், மணி, சாந்தராஜ், சுற்றுசூழல் அணி ரவி, தாகீர், ஜனனி தங்கம், நகர இளைஞரணி மணிகண்டன் உட்பட பலர் பங்கேற்றனர்.

மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் தயாஇளந்திரையன் நன்றி கூறினார்.

Advertisement