2026க்கு அடிபோட்ட சுதீஷ்

தஞ்சாவூர் தொகுதியில், அ.தி.மு.க., கூட்டணியில், தே.மு.தி.க., சார்பில், சிவநேசன் வேட்பாளராக போட்டியிடுகிறார். இதையடுத்து நேற்று முன்தினம் இரவு தேர்தல் பணிமனை அலுவலகம் திறக்கப்பட்டது.

திறப்பு விழாவில் கலந்துகொண்ட தே.மு.தி.க., துணை பொதுச்செயலரும், பிரேமலதாவின் தம்பியுமான சுதீஷ் பேசியதாவது:

கடந்த 2011ல் நடந்த சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., - தே.மு.தி.க., கூட்டணி இணைந்து போட்டியிட்டு, 206 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

2021ல் நடந்த சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்டிருந்தால், மீண்டும் பழனிசாமி தான் முதல்வராகி இருப்பார்.

வரும் 2026ல் நடக்கவிருக்கும் சட்டசபை தேர்தலில்,அ.தி.மு.க., - தே.மு.தி.க., கூட்டணி அமைத்து போட்டியிட்டு, ஒற்றுமையாக செயல்பட்டால் பழனிசாமி மீண்டும் முதல்வராவார்.

இவ்வாறு அவர் பேசினார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)