சிலந்தி வலையில் அண்ணாமலை!

நேற்று முன்தினம், தன் தொகுதியான கோவையில் பிரசாரத்தை துவங்கச் சென்ற தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலைக்கு ஒரு 'ஷாக்' காத்திருந்தது. கட்சி அலுவலகத்தை பூட்டிவிட்டு உள்ளூர் நிர்வாகிகள் வீட்டுக்கு சென்றுவிட்டனர்! ஏர்போர்ட்டில் மேள தாளங்களோடு அவருக்கு கிடைத்த வரவேற்பை தாண்டி, இது தான் உண்மையான வரவேற்பு.

வேட்பாளாராக நியமிக்கப்படுவதில் இருந்து எவ்வளவோ தப்ப முயன்ற அண்ணாமலை, உள்ளூர் பா.ஜ., முக்கியஸ்தர்களின் சிலந்தி வலையில் சிக்கிவிட்டார் என்பதே பேச்சாக இருக்கிறது. இதில் உள்ளூர் பிரமுகர்கள் மட்டுமல்லாது, அ.தி.மு.க.,- - தி.மு.க.,வின் கையும் இருப்பது கூடுதல் அதிர்ச்சி தகவல்.

இதை கேட்பவர்களில், 'இதென்னப்பா புருடா, கட்சி வளர்ந்து வர நேரத்துல மேலிடம் எப்டி ஒத்துக்குவாங்க?' என்று ஒரு தரப்பு கேட்க, 'அ.தி.மு.க., -தி.மு.க.,வுக்கு இதுல என்ன லாபம்?' என்று மற்றொரு தரப்பு கேட்கிறது.

இதற்கெல்லாம் அண்ணாலை விசுவாசிகள் கொடுக்கும் விளக்கம்:

வேறு வழியில்லை



தலைவருக்கு போட்டியிடுவதில் விருப்பம் இல்லை. அவருடைய விருப்பமாக 2026 தேர்தல் தான் இருந்தது. அதனால் தான், 'டில்லி அரசியலில் எனக்கு விருப்பம் இல்லை' என்று பேட்டி கொடுத்தார். இதை கட்சி மேலிடத்திடமும் தெரிவித்துவிட்டார். பிரதமர் மோடி வந்திருந்தபோது கூட, 'லோக்சபா தேர்தல் உனக்கான களம் அல்ல; கட்சி வெற்றிக்காக தமிழகம் முழுதும் பிரசாரம் செய்' என்று தான் சொல்லி இருந்தார். அந்த நம்பிக்கையில் இருந்த தலைவருக்கு, டில்லிக்கு வேட்பாளர் பட்டியலோடு சென்றபோது, அமித் ஷாவும், நட்டாவும் பெரும் அதிர்ச்சியை கொடுத்தனர். 'கண்டிப்பாக போட்டியிட வேண்டும்; நாங்கள் பிரதமரிடம் பேசிவிட்டோம்' என்று வற்புறுத்தினர். வேறு வழியில்லாமல் ஒப்புக்கொண்டார்.

இதற்கு காரணம் தமிழக பா.ஜ., முக்கிஸ்தர்கள் தான். அண்ணாமலைக்கு மற்ற பா.ஜ., தலைவர்களோடு அவ்வளவு சுமூகமான உறவு கிடையாது என்பது, நாடு அறிந்த விஷயம்.

அவர்கள், சமீபத்தில் அடிக்கடி டில்லிக்கு சென்று நட்டாவிடமும் அமித்ஷாவிடமும் 'தமிழகத்தில் இருந்து பிரதமர் போட்டியிட வேண்டும் இல்லையென்றால் அண்ணாமலை போட்டியிட வேண்டும். தலைவர்கள் களத்துக்கு வரும்போது தான் தொண்டர்களுக்கு உற்சாகம் பிறக்கும்' என்று வலியுறுத்தினர். கூடவே தலைவர்கள் போட்டியிடும் போதெல்லாம், பா.ஜ.,வுக்கு கிடைத்த வாக்கு விகித புள்ளிவிபரங்களையும் கொடுத்து தலைமையை சமாளித்தனர் என, டில்லியில் உள்ள கட்சியினர் எங்களிடம் சொல்கின்றன.

இப்போது ஜார்க்கண்ட் கவர்னராக உள்ள சி.பி.ராதாகிருஷ்ணனை தேர்தலில் நிற்க வைத்து தோற்கடித்தது போல, அண்ணாலையை தோற்கடிக்க வேண்டும் என்பதே அவர்களுடைய குறிக்கோள். 'அண்ணாமலை அபரிமிதமாக வளர்ந்து விட்டார். 2026 வரை இன்னும் இரண்டு ஆண்டுகள் விட்டுவைத்தோமானால், பிடிக்க முடியாத உயரத்திற்கு போய்விடுவார்' என்று மற்ற தலைவர்கள் அஞ்சுகின்றனர்.

நிர்வாக சிக்கல்



இந்த தேர்தலில் என்ன முடிவு வந்தாலும் அவர்களுக்கு லாபம் தான். அண்ணாலை தோற்றுப்போனால், 'பிரதமர் பிரசாரம் செய்து கொடுத்தே தோற்றுவிட்டாரே' என்று அண்ணாமலையை அமுக்கிவிடுவர். அதற்குபின் அவருடைய அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகும். தங்கள் முயற்சியையும் மீறி ஜெயித்துவிட்டால், டில்லி பக்கம் போய்விடுவார், இங்கு கவனம் செலுத்த முடியாது என்பதே அவர்கள் கணக்கு.

இதை கட்சி தலைமை எப்படி ஏற்றது என்பதே புரியவில்லை. இந்த உள்ளடி அரசியலை எல்லாம் தாண்டி, அண்ணாமலை போட்டியால், தேர்தலில் நிர்வாக சிக்கல் வரும் என்பது கூடவா அவர்களுக்கு தெரியாது? இப்போது பாருங்கள், அண்ணாமலைக்காக பணியாற்ற ஏராளமான பா.ஜ., தொண்டர்கள் பிற மாவட்டங்களில் இருந்து கோவை வந்த வண்ணம் இருக்கின்றனர். அந்த மாவட்டங்களில் அப்போது யார் வேலை செயவர்? தமிழகத்தில் பா.ஜ.,வின் ஒரே பிரசார பீரங்கி அண்ணாமலை. தேர்தல் நேரத்தில் அவரை ஒரு தொகுதியில் கட்டிப்போட்டால், மற்ற வேட்பாளர்களுக்கு யார் பிரசாரம் செய்வர்? அனைவரும் பொன்னார், தமிழிசையை போல பிரபலமானவர்கள் இல்லையே!

தொகுதி பங்கீடில் இருந்து, வேட்பாளர் தேர்வு வரை கட்சி தலைமை அனைத்திலும் சொதப்பி இருப்பதை பார்த்தால், அவர்களுக்கு தமிழகத்தின் மீது கவனம் இல்லை என்றே சாதாரண பா.ஜ., தொண்டர்களுக்கும் தோன்றுகிறது.

பிரதமர் மட்டும் தான் தமிழகத்துக்காக உருகுகிறார். வேறு யாருக்கும் அக்கறை இல்லை.

உள்ளடி வேலை இப்படி இருக்கிறது


Palanisamy Sekar - Jurong-West,
29-மார்-2024 10:59 Report Abuse
Palanisamy Sekar அண்ணாமலை என்கிற ஒரு மனிதனுக்காகத்தான் மக்கள் பலரும் பாஜகவில் இணைந்தனர். அண்ணாமலையை போட்டியிட வைத்ததே தவறான செயலாகும். அதிலும் உள்ளடி வேலை செய்வோரால் அண்ணாமலையை வீழ்த்தமுடியுமா என்பதை இரண்டு திராவிட கட்சிகளும் பணத்தால் விலைபேசுவதை அறிந்தவர்தான் அண்ணாமலை. குண்டூசியை வைத்து இமயத்தை சாய்த்திடலாம் என்பவன் ஒன்று பைத்தியக்காரனாக இருப்பான். அல்லது திராவிட கட்சியில் இருப்பான்.. ஆனால் அவர்களால் அண்ணாமலையை ஒன்றும் செய்திடவே முடியாது. மக்களால் மக்களின் அன்பினால் அவர் வெல்லப்போவது உறுதி
m.n.balasubramani - TIRUPUR, இந்தியா
24-மார்-2024 21:44 Report Abuse
m.n.balasubramani இந்த மனிதன் உழைப்புக்கு நிகர் யாரும் இல்லை இன்று வரை. கிராஸ் பெல்ட் தான் வேண்டும் என்றல் போங்க
கனோஜ் ஆங்ரே - மும்பை, இந்தியா
24-மார்-2024 18:20 Report Abuse
கனோஜ் ஆங்ரே “செத்தாண்டா சேகரு...?” - இது வடிவேல் காமெடி...
Dharmavaan - Chennai, இந்தியா
24-மார்-2024 18:05 Report Abuse
Dharmavaan இதன் பின்புறம் உள்ள புல்லுருவி யார்
Dharmavaan - Chennai, இந்தியா
24-மார்-2024 18:03 Report Abuse
Dharmavaan ஹிந்துக்கள் அழிந்ததே இது போன்ற புல்லுருவிகளால்தான் பிஜேபி தலைமைக்கு அறிவில்லை தன்னைத்தானே அழித்துக்கொள்கிறது
சிவா - சவுĪ - Jeddah, சவுதி அரேபியா
24-மார்-2024 17:16 Report Abuse
சிவா - சவுĪ உண்மைதான். ஒரு நபரின் உழைப்பும் திறமையும் இப்படித்தான் சொந்த கட்சியில் இருக்கும் கேடுகெட்ட சுயநலவாதிகளால் வீணடிக்கப்படுகிறது. கைக்கூலிகளை இப்போதே கட்டம் கட்ட வேண்டும்.
24-மார்-2024 16:20 Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் காலங்காலமாக இதே கதை காங்கிரசில் நடக்கிறது ..... ஏதாவது ஒரு மாநிலத்தில் யாராவது வளர்ந்துவிட்டால் அவரைத் தட்டி வைப்பது ..... தேசிய தலைமையை விட வளர்ந்துவிடுவாரோ என்கிற அச்சம்தான் காரணம் ..... இதுவும் நல்லதுக்குத்தான் .... இனி காங்கிரசின் கதிதான் பாஜகவுக்கும் .....
S.L.Narasimman - Madurai, இந்தியா
24-மார்-2024 14:31 Report Abuse
S.L.Narasimman சன்ன ஆட்டமா ஆடுறீங்க. ஒழுங்க அதிமுகாவோட கூட்டு வச்சிருந்தா இரெண்டு மூணு சீட்டு வென்று நோட்டாவுடன் போட்டி இல்லாம தப்பிச்சிருக்கலாம்.
chennai sivakumar - chennai, இந்தியா
24-மார்-2024 13:52 Report Abuse
chennai sivakumar அண்ணாமலையின் வளர்ச்சி எல்லோருக்குமே வயத்தேரிச்சல். அவர் எவ்வாறு வளர்ந்தார்?? உழைப்பு உழைப்பு கடுமையான உழைப்பு. மற்ற தலைகள் அவரைப்போல உழைக்க வில்லை மற்றும் உழைக்கவும் தயார் இல்லை. உழைப்பு ஜெயிக்குமா அல்லது வயத்தெரிச்சலால் thorkumaa??
Dharmavaan - Chennai, இந்தியா
24-மார்-2024 10:02 Report Abuse
Dharmavaan இப்படி உள்ளடி வேலையாலேயே பிஜேபி போன்ற கட்சிகள் தோற்றன .கண்டவனையும் கட்சியில் சேராவிடக்கூடாது என்பதே உண்மை
மேலும் 7 கருத்துக்கள்...
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)