நிஜம் போன பிறகு நிழலுக்கு வேலையில்லை
அ.தி.மு.க.,வுக்கு எதிராக சசிகலா செயல்பட மாட்டார் என நம்புகிறேன். ஏனென்றால், ஜெயலலிதா என்ற நிஜத்திற்கு கூடவே நிழலாய் இருந்தவர் சசிகலா. நிஜம் போன பின் நிழலுக்கு வேலை இல்லை. அந்த வகையில் சசிகலா என்னும் நிழலுக்கு, இனி அரசியலில் எந்த வேலையும் இல்லை. அதையும் மீறி, நிழல் நிஜமாக முயன்றால் தோல்வி தான் பரிசாகக் கிடைக்கும். முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தின் ஆதரவு எம்.எல்.ஏ.,வாக இருப்பவர் அய்யப்பன். அவர் சட்டசபையில், முதல்வர் ஸ்டாலினை போற்றிப் புகழ்ந்து பேசியது அவமானத்தின் உச்சம். எம்.ஜி.ஆர்., மீது உண்மையான மதிப்பும் மரியாதையும் கொண்ட அ.தி.மு.க.,வினர் ஒருவர் கூட, அய்யப்பனின் சட்டசபை பேச்சை ஏற்க மாட்டார்கள். அவருடைய பேச்சு, அ.தி.மு.க.,வுக்கு செய்த துரோகம். - நிர்மலா, மாநில செய்தி தொடர்பாளர், அ.தி.மு.க.,
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
தாமரை சின்னத்தில் போட்டியிடுமாறு கூட்டணி கட்சிகளை வலியுறுத்தும் பா.ஜ.,
பிப் 24, 2026 05:20 am
நாங்கள் விசில் ஊதுபவர்கள் எப்படி அமைதியாக இருக்க முடியும்? த.வெ.க., தலைவர் விஜய் கேள்வி
பிப் 24, 2026 05:37 am