விஜய் கனவு பலிக்காது என்கிறார் இ.பி.எஸ்.,
சென்னை: ''சினிமாவில் நடித்துவிட்டு, தன்னை எம்.ஜி.ஆராக சிலர் கனவு காண்கின்றனர்,'' என த.வெ.க., தலைவர் விஜயை, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி மறைமுகமாக தாக்கினார். சென்னையில், எம்.ஜி.ஆரின் இதயக்கனி படம், ரீ ரிலீஸ் ஆனது. அதை, கட்சியினரோடு, பழனிசாமி நேற்று பார்த்தார். பின் அவர் அளித்த பேட்டி: சினிமாவில் அரசியலை புகுத்தி, வெற்றி பெற்றவர் எம்.ஜி.ஆர்., சினிமாவில் நிஜமாகவே, உச்சத்தில் இருந்தபோது, அரசியலுக்கு வந்தவர். தனது படங்களில் புகைப்பது, மது குடிப்பது போன்ற காட்சிகளை தவிர்த்தார். ஆனால், தற்போது சிலர், சினிமாவில் நடித்துவிட்டு, தன்னை எம்.ஜி.ஆராக நினைக்கின்றனர். அதையே கனவாகவும் காண்கின்றனர். அக்கனவு ஒருபோதும் பலிக்காது. இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அன்று துரோகிகள்; இன்று கூட்டணி கட்சியினர்: என்ன சொல்வார் பிரேமலதா!
பிப் 19, 2026 06:44 pm
எனக்கு அரசியலே பிடிக்காது; காலச் சூழ்நிலையை காரணம் சொல்லி வைகோ மகன் துரை குமுறல்
பிப் 19, 2026 09:15 pm
கூட்டணி என்பது தலைவர்களின் விருப்பம்: தேமுதிக-திமுக கூட்டணி குறித்து இபிஎஸ் பேட்டி
பிப் 19, 2026 05:21 pm