இந்திய நாகரிகத்தை காக்க மதமாற்றத்தை தடுக்கணும்
சென்னை: ஜெனிவாவில் நேற்று நடந்த, ஐ.நா., மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக தமிழக பா.ஜ., செயலர் அஸ்வத்தாமன் பேசியதாவது: பல தெய்வங்களை கொண்ட நாகரிகங்களில், பல்வேறு வாழ்க்கை முறைகளும், பல்வேறு நுகர்வு முறைகளும் காணப்படுகின்றன. மிக முக்கியமாக இயற்கை அம்சங்களை தெய்வமாக வழிபடும் மரபால், இயற்கை பாதுகாக்கப்படுகிறது. உதாரணமாக, என் சொந்த ஊரான பண்ருட்டியில், விஷ்ணு பகவானால் உருவாக்கப்பட்டதாக நம்பப்படும் கெடிலம் நதி உள்ளது. மதம் என்பது பெரும்பாலும் ஒரு கடவுள் என்ற கருத்தை மையமாகக் கொண்டது. அதனால், ஒரே சடங்கு, ஒரே வாழ்க்கை முறை, ஒரே நுகர்வு நடைமுறை உருவாகிறது. பண்டைய எகிப்து, ரோம நாகரிகங்கள் போன்ற பல பழைய நாகரிகங்களை, ஏற்கனவே இழந்து விட்டோம். மதமாற்றங்களால், அவை மறைந்து விட்டன. எனவே, உலகில் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கும் பழமையான நாகரிகங்கள் இருக்கும் பகுதிகளில், வேகமாக நடக்கும் மதமாற்றங்களை கட்டுப்படுத்த, உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
வாசகர்கள் கருத்துகள் ( 5 )
இந்து மதம் உலகிலேயே மிகப் பழமையானது. உலகில் வேறு எந்த மதத்திற்கும் இல்லாத சிறப்புக்கள் இந்து மதத்துக்கு உண்டு. இறைவனை பல வடிவங்களில் வணங்கும் இம்மதம், எங்கும் எதிலும் இறைவனே உறைவதை வலியுறுத்துகிறது. ஆனால் இந்த புனித நாட்டில் பல்வேறு படையெடுப்புகள் காரணமாக இஸ்லாம் மற்றும் கிருஸ்தவம் வேரூன்றி விட்டன. இப்படி மதம் மாறிப் போனவர்களே இந்து மதத்துக்கு அச்சுறுத்தலாக இருப்பது தான் வேதனையான விஷயம்.
பிஜேபி சினிமாகாரர்களை நம்பாமல் இவர்களை போல சமூக பலம் கொண்டவர்களை, தமிழ்நாட்டில் முன்னிறுத்த வேண்டும். அப்போது தான் தமிழ்நாட்டில் கால்பதிக்க முடியும். உலகத்தில் மிக பெரிய அழிவை போர்களை, அழிவு பாவ மன்னிப்பு சக்திகளும், அமைதி வழிகளும் அதன் தலைவர்களுமே கடந்த 1100 ஆண்டுகளில் நடத்தி உள்ளனர். இந்த இந்திய சமூகம் அமைதியையும், தர்மத்தையும் மட்டுமே பேணி வந்து உள்ளது. இதை எல்லாரும் புரிந்து கொண்டால் நல்லது.
கிரிப்டோக்களே ஹிந்து பேரில் நமது மதத்தை இழிவு படுத்தி பதிவு போடுகிறார்கள். வெளியிலிருந்து படித்தால் ஹிந்துக்கள் போலவும், கிறித்துவங்க இருந்து வெறுப்பை கக்குவது ஆனால் இவர்களே அன்பை பற்றி பேசுவார்கள் இப்படித்தான் கனடாவை அழித்தார்கள். சில வருடங்களுக்கு முன்னாள் போப்பே மன்னிப்பும் கேட்டார். மதம் மாற்றுவது ஒரு தொழில்
கனடா அழித்தது ஹிந்துக்கள் என்பது எல்லாருக்கும் தெரியும் .
முற்றிலும் உண்மை. ஹிந்துக்களே பாவிகளே என்று அழைப்பவர்களை மத மாறாதீர்கள். அது அவர்களுக்கு ஒரு தொழில். எவ்வளவு பேரை மதம் மாற்றுகிறார்களோ அவ்வளவு காசு வெளிநாட்டிலிரு து இது தொழில் அன்பு அன்பு என்று சொல்லி, ஹிந்துக்கள் சட்டங்கள் ன்னு சொல்லி வெறுப்பை வளர்த்து, காசு கொடுத்து தொழில் செய்கிறார்கள்