Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் கருத்துக் கணிப்பு முடிவுகள்

Advertisement


 தி.மு.க.,வில் நாளை முதல் வேட்பாளர் நேர்காணல்

 தி.மு.க.,வில் நாளை முதல் வேட்பாளர் நேர்காணல்

சென்னை: தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகன் அறிக்கை: தி.மு.க., சார்பில், தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டசபை தேர்தலில் போட்டியிட விண்ணப்பம் அளித்தவர்களை, கட்சி தலைவர் ஸ்டாலின், நாளை முதல் 22ம் தேதி வரை சந்தித்து, வேட்பாளரை தேர்வு செய்ய உள்ளார். புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிக்கு நாளை நேர்காணல் நடக்கும்.

வரும் 18ம் தேதி காலை, துாத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி; மாலை, மதுரை, தேனி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை; 19ம் தேதி காலை, கரூர், நாமக்கல், ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி; மாலை, கிருஷ்ணகிரி, திண்டுக்கல் மாவட்டங்களுக்கு நேர்காணல் நடக்கும்.

வரும் 20ம் தேதி காலை, ராணிப்பேட்டை, வேலுார், திருப்பத்துார், திருவண்ணாமலை; மாலை, தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி; 21ம் தேதி காலை, திருச்சி, தஞ்சாவூர், பெரம்பலுார், அரியலுார்; மாலை புதுக்கோட்டை, கடலுார், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர்; 22ம் தேதி காலை, விழுப்புரம், காஞ்சிபுரம் தெற்கு; மாலை, திருவள்ளூர், காஞ்சிபுரம் வடக்கு, சென்னை மாவட்டங்களுக்கு நேர்காணல் நடக்கும்.

குறிப்பிட்ட தேதிகளில், மாவட்டச் செயலர் மற்றும் விண்ணப்பம் அளித்தவர்கள் வர வேண்டும். அவர்கள், தங்கள் ஆதரவாளர்களை அழைத்து வரக்கூடாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement