/ செய்திகள் / ஒரு ராஜ்யசபா சீட்டும் 28 தொகுதிகளும்: நீண்ட இழுபறிக்கு பின் காங்கிரசுக்கு ஒதுக்கியது திமுக

ஒரு ராஜ்யசபா சீட்டும் 28 தொகுதிகளும்: நீண்ட இழுபறிக்கு பின் காங்கிரசுக்கு ஒதுக்கியது திமுக

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கடும் இழுபறியில் இருந்து வந்த தொகுதிகள் ஒதுக்கீடு விவகாரத்தில் திமுக -காங்கிரஸ் இடையே ஒப்பந்தம் இன்று மாலை கையெழுத்தானது. காங்கிரசுக்கு 28 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட்டை திமுக ஒதுக்கி உள்ளது.தமிழகத்தில், 20 ஆண்டுகளுக்கும் மேலாக, தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி தொடர்கிறது. இரு கட்சிகளின் தலைமையும், நட்புடன் இருந்ததால், தேர்தலை எவ்வித இடையூறுமின்றி சந்தித்து வந்தன. ஆனால், சமீபகாலமாக நடந்த பல்வேறு நிகழ்வுகள், இரு கட்சி களுக்கும் இடையே விரிசலை ஏற்படுத்தியது.

நெருடல்

எனினும், வரும் சட்டசபை தேர்தலை, காங்கிரசுடன் இணைந்தே எதிர்கொள்ள தி.மு.க., தரப்பு முடிவெடுத்தது. ஆனால், நடிகர் விஜய், தன் கட்சியுடன் கூட்டணி சேருவோருக்கு ஆட்சியில் பங்கு தரப்படும் எனக் கூறியதும், களம் மாறத் துவங்கியது. காங்கிரசை நோக்கி, த.வெ.க., வலுவான துாண்டிலை வீச, தி.மு.க.,வுடன் இருந்த நெருடல்களை காங்கிரசார் பெரிதாக்கினர். த.வெ.க.,வுடன் கூட்டணி செல்லலாம் என வெளிப் படையாக பேசத் துவங்கினர்.இந்த சூழலில், தி.மு.க., தரப்பில் தொகுதி பங்கீட்டு குழுவுடன் பேசிய காங்கிரஸ் தரப்பு, '41 தொகுதிகள், ஆட்சியில் பங்கு, உள்ளாட்சி அதிகாரத்தில் 25 சதவீத பங்கு, இரண்டு ராஜ்யசபா சீட், துணை முதல்வர் பதவி' என, ஏகப்பட்ட நிபந்தனைகள் விதித்தது.தி.மு.க., தரப்பில், 'காங்கிரசுக்கு 21 தொகுதிகள் மட்டுமே வழங்க முடியும்' என, 'கூலாக' தெரிவித்தனர். இது காங்கிரஸ் தலைமையை, தி.மு.க., மீது அதிருப்தி அடைய வைத்தது.

நிர்ப்பந்தம்

இதற்கிடையில், தமிழகத்தில் காலியாக இருக்கும் ராஜ்யசபா உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தலில், வேட்பு மனு தாக்கல் நாளை நிறைவடைய உள்ளதால், அதற்குள் கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய வேண்டிய நிர்ப்பந்தம், இரு தரப்புக்கும் ஏற்பட்டது. நேற்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், சென்னையில் முதல்வர் ஸ்டாலனை சந்தித்து பேசினார். அப்போது தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையும் உடன்இருந்தார்.இதன் பிறகு அவர் டில்லி சென்று காங்கிரஸ் மேலிட தலைவர்களுடன் பேசினார்.இந்நிலையில், இன்று மாலை திமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் ஸ்டாலினை, காங்கிரசின் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை குழுவினர் சந்தித்து பேசினர். இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் காங்கிரசுக்கு 28 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இத்துடன் ராஜ்யசபா சீட் ஒன்றை வழங்க திமுக முன்வந்ததை காங்கிரஸ் ஏற்றுக் கொண்டு அதற்கான ஒப்பந்தத்தில் இன்று கையெழுத்திட்டது. அதில், முதல்வர் ஸ்டாலின் மற்றும் தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை சேர்ந்து கையெழுத்து போட்டனர்.இதுகுறித்து நிருபர்களிடம் செல்வபெருந்தகை கூறியதாவது; இன்று திமுக காங்கிரஸ் இடையே தொகுதிகள் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு உள்ளது. 28 தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா சீட்டும் ஒதுக்கப்பட்டு உள்ளது. ராஜ்ய சபா வேட்பாளர் யார் என்பதை அகில இந்திய காங்கிரஸ் தலைமை விரைவில் அறிவிக்கும்.தொகுதி ஒதுக்கீட்டில் எந்த தாமதமும் இல்லை. மனநிறைவோடு இருக்கிறோம். மகிழ்ச்சியாக இருக்கிறோம். இவ்வாறு செல்வபெருந்தகை கூறினார். 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து காங்கிரஸ் தேர்தலை சந்தித்தது. அப்போது காங்கிரசுக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. தற்போது 2026 சட்டசபை தேர்தலில் கூடுதலாக வெறும் 3 தொகுதிகள் காங்கிரசுக்கு தரப்பட்டு உள்ளன. இந்த 3 தொகுதிகளை பெறுவதற்காக 2025ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் காங்கிரஸ் காத்திருந்தது.

தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 50 )

Chandru
மார் 05, 2026 13:53

வாழ் நாள் அடிமையாக இருக்க காங்கிரஸ் முடிவு கட்டிவிட்டது . மாணிக்கம் தாகூ அவர்களின் அதிகாரத்தில் பங்கீடு என்பது புஸ் ஆகி விட்டதே ??


தமிழன் மணி
மார் 05, 2026 02:38

திருவண்ணாமலை திருச்செந்தூர் பழனி மருதமலை சுவாமிமலை மதுரை மீனாட்சி அம்மன் திருநல்லார் திருப்பரங்குன்றம் தஞ்சாவூர் ராமேஸ்வரம் திருச்சி மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் பிள்ளையார்பட்டி விநாயகர் ஆலயம் மேட்டுப்பாளையம் வனபத்ரகாளி அம்மன் கோயில் திருநாகேஸ்வரம் பழமுதிர்ச்சோலை சிவன்மலை கோவை கோணியம்மன் ஈச்சனாரி விநாயகர் சிதம்பரம் நடராஜர் திருச்சி ஸ்ரீரங்கம் வைத்தீஸ்வரன் கோயில் நாமக்கல் ஆஞ்சநேயர் போன்ற கோயில்களில் விழுந்து விழுந்து காங்கிரஸ் கும்பல் 4 மாதங்களாக அங்கப்பரதாச்சனம் செய்தது வெறும் 3 சட்டசபை சீட்டுக்குத்தானா? இதை நேராகவே "ஐயா கொஞ்சம் சேத்து குடுங்க எசமான்" என ராப்பிச்சை கேட்டிருந்தாலே திருட்டு முன்னேற்றக் கழகம் பிச்சை போட்டிருக்குமே


Minimole P C
மார் 05, 2026 10:17

Let us pity cong.


Saran
மார் 05, 2026 00:49

Business deal…. The karunanithi Family is Bringing all the robbers together to loot TN Unfortunately TN people will never understand their game, they continue to vote for these corrupted and uncivilised group


Minimole P C
மார் 05, 2026 10:18

well said.


Raj
மார் 05, 2026 00:07

இது தி மு க வின் ஐடியா தான்,. த வெ க வுடன் கூட்டணி சேரக்கூடாது என்பதற்க்கான இழுபறி. இப்போ எப்படி ஆட்சி அதிகாரம் இல்லையென்றவுடன் ஒத்துக்கொண்டார்கள். தோல்வியை தழுவ வாழ்த்துக்கள்.


Chinnappan Arulappan
மார் 04, 2026 23:42

8 தொகுதிகளில் ஜெயித்து விடுவார்களா??


Srinivasan Narasimhan
மார் 04, 2026 23:33

எல்லாம் டிராமா கொலை கொள்ளை மக்களுக்கு வடை சுண்டல்


prakash
மார் 04, 2026 22:52

வெறும் 28 சீட்டுக்கு இழுபறின, அப்ப எவ்ளோ கம்மியா முன்னாடி பேசி இருப்பாங்க DMK, பாவம் காங்கிரஸ் இதுக்காக எத்தனை அங்கபிரதச்சனம் செய்தது!


M.Selvam
மார் 04, 2026 22:46

பாஜக அதிமுக விக் கு எவ்வளவு எப்போது ஒதுக்கு வாக ???


சந்திரசேகர்
மார் 04, 2026 22:32

மத்தியில் காங்கிரசுக்கு திமுக அடிமை. மாநிலத்தில் திமுகவுக்கு காங்கிரஸ் அடிமை


சந்திரன்
மார் 04, 2026 22:31

இன்னும் அறிவாலய வாசலில் சுண்டல் விற்பவர்கள் மட்டும்தான் பாக்கி. அவர்களும் ஒரு கட்சி வைத்திருந்தால் அவர்களையும் தி.மு.க கூட்டணியில் இணைத்திருப்பார்கள்.