பலாப்பழமே வேண்டாம் ராமநாதபுரத்தார் 'ரவுசு'

ராமநாதபுரம் தொகுதியில் பா.ஜ., கூட்டணியில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் சுயேச்சையாக போட்டியிடுகிறார்.

பன்னீர்செல்வத்தை தவிர்த்து, அவரது பெயரில் வெவ்வேறு சின்னங்களில் ஐந்து பேர் போட்டியிடுகின்றனர். இதனால் அவரது சின்னமான பலாப்பழத்துடன் எம்.ஜி.ஆர்., வேடமிட்டவர் மூலம் பிரசாரம், சின்னம் அச்சிடப்பட்ட துண்டுகள் என வாக்காளர்கள் மனதில் பதிய வைக்க பல்வேறு யுக்திகளை பன்னீர் செல்வம் தரப்பினர் கையாண்டு வருகின்றனர். தேர்தல் பிரசாரத்தில் எங்கு சென்றாலும், 'நம் சின்னம் என்ன' என்று பன்னீர்செல்வம் கேட்கிறார். கூடியுள்ள மக்கள் பலாப்பழம் என தொடர்ந்து சொல்கின்றனர்.

பிரசாரம் முடிந்ததும் பலாப்பழங்களை வீடுகள் தோறும் கொடுத்து விடுவதால், போதும் போதும் என்ற மனநிலைக்கு அத்தொகுதி மக்கள் வந்து விட்டதாக கட்சியினர் புலம்புகின்றனர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்