தேர்தலுக்காக பழிபோட வேண்டாம்: அமைச்சர் ரகுபதி கொதிப்பு

"தேர்தலை மனதில் வைத்து தமிழக அரசு மீது பழிபோட வேண்டாம்" என தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.

அமைச்சர் ரகுபதி கூறியதாவது:

தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தை தடுப்பதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. போதைப்பொருள் வழக்குகளில் 80 சதவீதத்திற்கு அதிகமானவர்களுக்கு தண்டனையை பெற்றுத் தந்துள்ளோம்.

கடந்த 2022ம் ஆண்டு போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக 2,016 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குஜராத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகமாக உள்ளது என அனைவருக்கும் தெரியும். அமைதிப் பூங்காவான தமிழகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சி பலன் அளிக்காது. தேர்தலுக்காக தமிழக அரசு மீது மத்திய அரசு பழி போட வேண்டாம். குஜராத்தில் 26,000 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. போதைப்பொருட்கள் எதிர்கால சந்ததியினரை பாதிக்கும் என்பதால், தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 16 பேரை பா.ஜ., தனது கட்சியில் இணைத்து கொண்டுள்ளது.

தேர்தல் நெருங்குவதால் தான் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகள் துவங்கியுள்ளன. தேர்தலுக்கு பின் அந்தப் பணிகள் நின்றுவிடும். இவ்வாறு அவர் கூறினார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்