தி.மு.க.,வை தோற்கடித்தால் மாதம் ரூ.1,000 கிடைக்கும்!



கடந்த 2021 சட்டசபை தேர்தலின் போது, அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம், 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று, தி.மு.க., வாக்குறுதி அளித்தது.

ஆட்சிக்கு வந்து இரு ஆண்டுகளுக்கு பின், தகுதியுள்ள குடும்பங்களுக்கு மட்டுமே உரிமைத் தொகை வழங்கப்படும் என்று கூறியது. இதனால், 2 கோடிக்கும் அதிகமான குடும்ப தலைவிகளுக்கு உரிமைத் தொகை மறுக்கப்பட்டது.

இந்த லோக்சபா தேர்தலில், தி.மு.க., வெற்றி பெற்றால், 2 கோடி பேருக்கும் உரிமைத் தொகை எப்போதும் கிடைக்காது. மாறாக, இந்த தேர்தலில் தி.மு.க.,வை தோற்கடித்தால், அனைத்து குடும்ப தலைவிக்கும் உரிமைத் தொகை கிடைக்கும்.

எனவே, தமிழக வாக்காளர்கள் குறிப்பாக பெண்கள் பா.ஜ., கூட்டணிக்கு ஓட்டளித்து, தி.மு.க.,வை படுதோல்வி அடைய செய்ய வேண்டும். அப்போது தான் அனைவருக்கும் உரிமைத் தொகை கிடைக்கும்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்