கூடுதல் சீட்டுக்காக புகழ்ந்து பேசுகின்றனர்: தமிழிசை
அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே மாதிரியான நிதி கொள்கை தான். அதனால், தமிழகத்திற்கு மத்திய பா.ஜ., அரசு வஞ்சனை செய்வதைப்போல் முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் பேசுவதை, இனி நிறுத்திக் கொள்ள வேண்டும்.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை, மருது சகோதரர்கள் போல் ஸ்டாலினையும், ராகுலையும் ஒப்பிட்டுப் பேசுகிறார். அதை ஏற்றுக் கொள்ள முடியாது.
மணிசங்கர் அய்யர் கட்சியிலேயே இல்லை என, காங்சிரசாரே சொல்கின்றனர். ஆனால், முதல்வர் ஸ்டாலினை அவர் புகழ்ந்து பேசுகிறார். அவர் மட்டுமல்ல, அவர் போல பேசும் காங்கிரசார், கூடுதல் சீட்டுக்காக புகழ்ந்து பேசுவதாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்.
- தமிழிசை, மூத்த தலைவர், தமிழக பா.ஜ.,
Advertisement

வாசகர்கள் கருத்துகள்