Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு

Advertisement


வேணுகோபாலை சந்திக்க மறுத்த ஸ்டாலின்: தோல்வியடைந்த செல்வப்பெருந்தகை முயற்சி

வேணுகோபாலை சந்திக்க மறுத்த ஸ்டாலின்: தோல்வியடைந்த செல்வப்பெருந்தகை முயற்சி
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

-நமது நிருபர்


த.வெ.க.,வுக்கு ஆதரவாக பேசி வரும் காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூர், காங்கிரஸ் தரவு பகுப்பாய்வு பிரிவு தலைவர் பிரவின் சக்கரவர்த்தி மீது, காங்கிரஸ் மேலிடம் நடவடிக்கை எடுக்க மறுத்துவிட்டது.

கூட்டணி ஆட்சி மற்றும் அதிகாரப் பகிர்வு என்ற கோரிக்கையை, தி.மு.க.,விடம் தமிழக காங்கிரஸ் கட்சி முன்வைத்துள்ளது. அதற்கு வாய்ப்பே இல்லை என, முதல்வர் ஸ்டாலின் கைவிரித்து விட்டார். இந்த சூழலில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் பெயரை மாற்றியதை கண்டித்து, சென்னையில் நேற்று நடந்த காங்கிரஸ் பேரணியில், அக்கட்சியின் பொதுச்செயலர் வேணுகோபால் பங்கேற்றார்.
அவரையும் முதல்வர் ஸ்டாலினையும் சந்திக்க வைக்கவும், முதல்வர் வீட்டில் தேநீர் விருந்து அளிக்கவும், காங்கிரசில் ஒரு தரப்பினர் முயற்சிகள் மேற்கொண்டனர். ஆனால், ஸ்டாலின் அதை விரும்பாததால் சந்திப்பு நடக்கவில்லை என, காங்., தரப்பில் கூறுகின்றனர்.
சென்னை முகப்பேர் பகுதியில் நேற்று நடந்த காங்கிரஸ் பேரணிக்கு, வேணுகோபால் வருகிறார் என தெரிய வந்ததும், ஆட்சியில் பங்கு கோரி, காங்கிரஸ் உரிமை மீட்பு குழு சார்பில், அப்பகுதியில் 'போஸ்டர்'கள் ஒட்டப்பட்டன.

'அதிகாரமற்ற அரசியல் அர்த்தமற்ற அரசியல்; வேண்டும் வேண்டும் ஆட்சியில் பங்கு தரும் கட்சியுடன் கூட்டணி வேண்டும்; சுயமரியாதையை இழந்து கூட்டணி வேண்டாம்' என்ற வாசகத்துடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. தி.மு.க., ஆதரவு காங்கிரஸ் நிர்வாகிகள், அந்த போஸ்டர்களை கிழித்தெறிந்தனர்.

Advertisement

பிப் 18, 2026 01:30 pm

ஸ்டாலின் எப்படி பட்டவர் என்று தெரிந்து கொண்டு இருப்பார்கள்

Reply Rate this
Modisha - Chennai
அற்பன் என்றா ?
பிப் 18, 2026 03:46 pm
Rate this
பிப் 18, 2026 01:19 pm

கூட்டணியின் போவிஷு எந்த மட்டத்தில் உள்ளது என்று பாருங்கள்.

Reply Rate this
பிப் 18, 2026 11:30 am

காங்கிரசுக்கு நல்லது. ஒருவேளை திமுகவுடன் கூட்டு தொடர்ந்தால் காங்கிரஸ் மத்தியில் ஆட்சிக்கு வரும் பொழுது திமுகவிற்கு அவர்கள் கேட்கும் இலாக்கா கொடுக்கவேண்டும். தவிர திமுவின் மேல் வருகின்ற உச்சநீதிமன்ற வழக்குகளுக்கு முட்டு கொடுத்து காப்பாற்ற வேண்டி வரும். திராவிட கட்சி ஒன்றும் தனித்து நிற்க போவதில்லை. மத்தியில் அவர்களுக்கு பதவி வேண்டும். மாநிலத்தில் திமுகவுக்கும் பிரச்சாரம் செய்து அவர்களை வெற்றிபெறச்செய்து ஆட்சி அமைக்க விட்டு விட்டு இவர்கள் கைகட்டி நிற்க வேண்டுமா ? கதவை திற காற்று வரட்டும்.

Reply Rate this
பிப் 18, 2026 10:55 am

செல்லபெருந்தகைக்கு தெரியும் ஆட்சிமாறினால் அவர் நிலமை என்னாகும்னு.. சவுக்கு வீட்டில் சாக்கடை கொட்டியதை மறந்தா இருப்பார்.

Reply Rate this
Thravisham - Bangalorw
டெண்டர்தொகை கதை கந்தலாகி விடும். இப்போதே சத்யமூர்த்தி பவனை வழித்து ஏப்பம் விட்டு கொண்டிருக்கிறார்.
பிப் 18, 2026 03:06 pm
Rate this
பிப் 18, 2026 10:53 am

எவ்வளவுதான் காங்கிரசை திமுக அசிங்க படுத்தினாலும் சிதம்பரமும் பெருந்தகையும் கவலையே படமாட்டாங்க..இரண்டுமே திமுக அடிமைகள்.

Reply Rate this

இப்போ தெரியுதா ஏன் நசுக்கிறாங்க, பிதுக்குறாங்க அப்படினு.. சும்மா மீசைய முறுக்கினால் போதாது. நேர்மையாக இருந்து மீசையை முறுக்கணும்..லாரி வேறு பழையது ஆகிவிட்டது.. குப்பையைக் கிளறினால் என்னவாகும்.. தொகை எண்ண ஓட்டம் இதுதான்..

Reply Rate this
பிப் 18, 2026 10:07 am

படிக்காத காங்கிரஸ் வடக்கனிடம் விடியலுக்கு என்ன பேச்சுவார்த்தை வேண்டி இருக்கு? விடியல் என்ன கொஞ்சம் கூட வெட்கம் மானம் ரோஷம் இல்லாத கட்சியா ??....

Reply Rate this
Narayanan - chennai
விடியல் என்னத்த படிச்சு கிழிச்சுட்டார். சுதந்திரதினம் ,குடியரசுதினம் தெரியாது. 2500 + 1500 = 5000 என்பார் .பூனை மேல் மதில் என்பார் .
பிப் 18, 2026 11:36 am
Rate this
பிப் 18, 2026 09:26 am

கொஞ்சம் கூட வெட்கம் மானம் இல்லாதவர்கள் இந்த காங்கிகள்.

Reply Rate this
ஆட்சியில் பங்கு வேண்டாம் ஐந்தோ பத்தோ சீட் கொடுத்தால் போதும் அண்ணாமலை என்ன யாரை சொன்னாலும் பதவியை பிடிங்க விடுவோம் என்று சொல்லும் பாஜகவை போலவா என்று மக்கள் மத்தியில் பேசிக்கொள்கிறார்கள்.
பிப் 18, 2026 11:14 am
Rate this
பிப் 18, 2026 09:25 am

மஹா திருட்டு கும்பல் தீய சக்தி திமுகவை விரட்டியடிப்போம்

Reply Rate this
தமிழக ஹிந்துக்களுக்கு உரிய நிதியை தராமல் வஞ்சகமாக ஏமாற்றி சுருட்டும் பாஜகாவுக்கு பாடம் புகட்டவோம் என்று ஹிந்துக்கள் பேசுகின்றனர்.
பிப் 18, 2026 11:52 am
Rate this
பிப் 18, 2026 09:12 am

என்னால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறேன் என்று கார்கே கூறினார். கார்கேயே ஒரு பொம்மலாட்ட பொம்மை. அவுரு பேசி பேசி என்னாத்த பண்ண போறாரு? செல்ல குறுந்தொகை ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கிலும் சவுக்கு சங்கர் வீட்டில் சாக்கடை தண்ணீரை ஊற்றியதிலும் மறைமுகமாக மாட்டிக்கொண்டு இருப்பதால் முகஸ் சப்போர்ட்டுக்கு முக்கிய முனகிக்கொண்டு இருக்கிறார். இப்போ கூட்டு+ ஆணி கயிற்றை ஆளுக்கு ஆளு இழுக்குறாய்ங்க. அது ஏற்கனவே நஞ்சி போயிருக்கு. எப்போது வேணுமின்னாலும் அறுந்து விழுந்திடும். மாணிக் முன்னாடியே திருட்டு தீயமுக காரனுங்களை ஒரு மிரட்டு மிரட்டியிருக்காரு. தீயமுக காரனுங்க எப்புடி அடிக்கிறான்களோ அதே மாதிரி பதிலடி குடுப்போம்ன்னு பகிரங்கமா பேசியிருக்காரு. அதன் விளைவுதான் முகப்பேர் போஸ்டர். அந்த போஸ்டர்களை தீய முக ஆளுங்க கிழித்தான்கள் ன்னா நாம் அதை புரிஞ்சிக்கலாம். செல்லா குறுந்தொகையே போயி கிழிச்சிருக்கு. கள்ள பணம் என்ன பாடு படுத்துது.....

Reply Rate this