Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


வருமானம் இல்லை; ஹரி நாடார் தகவல்

வருமானம் இல்லை; ஹரி நாடார் தகவல்

'சிறையில் இருப்பதால், தனக்கு வருமானம் இல்லை' என, ஆலங்குளம் தொகுதி சுயேச்சை வேட்பாளர் ஹரி நாடார், தனது வேட்பு மனு பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் சட்டசபை தொகுதியில், சுயேச்சை வேட்பாளராக, ஹரி நாடார் களமிறங்குகிறார். பல்வேறு வழக்குகளில் கைதாகி, சிறையில் இருக்கும் அவர், அங்கிருந்தபடி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். தனது வேட்பு மனுவில், ' சிறையில் இருப்பதால், 2021 - 22ம் நிதியாண்டு முதல், 2024 - 25ம் நிதியாண்டு வரை, தனக்கு வருமானம் இல்லை' என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், '2.50 லட்சம் ரூபாய் கையிருப்பு உள்ளது. வங்கி கணக்கு இல்லை. ஆறு உயர் ரக கார்கள், 11 கிலோ 650 கிராம் எடையில், 17.06 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் உள்ளன' என குறிப்பிட்டுள்ளார். அசையும் சொத்து மதிப்பு, 25.76 கோடி ரூபாய்; அசையா சொத்தாக, 12 லட்சம் ரூபாய் மதிப்பிலான வீடு உள்ளது. மொத்தம், 24 குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளன என, மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement