ஓட்டு போடவில்லை என்றால் கடவுள் தண்டிப்பார்: துரைமுருகன்
காட்பாடி: வேலுார் மாவட்டம், காட்பாடியில் நடைபெற்ற நல திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், தி.மு.க., அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:
துாங்குற குழந்தைக்கும், ஓடிச்சென்று பால் கொடுக்கும் தாய் போல, தாயுள்ளத்துடன் முதல்வர் ஸ்டாலின் மக்களுக்கு உதவி வருகிறார். இந்நிகழ்ச்சியில் பேசிய மகிமண்டலம் பஞ்சாயத்துத் தலைவர், 'கோவில் கட்ட நிதி வேண்டும்' என கேட்டார். நாங்கள் நிதி வாங்கும் நேரம் இது.
எல்லோரும் சேர்ந்து, வரும் தேர்தலிலும் எனக்கு ஓட்டு போடுங்க. உங்களுக்கு என்ன செய்யணுமோ அதையெல்லாம் செய்கிறேன். நான் வாக்கு கொடுத்தா, அதை கட்டாயம் செய்வேன். செய்ய முடியாமல் போனால், தெய்வம் என்னை நின்று கொல்லும்; அதேதான் உங்களுக்கும். சொல்லிவிட்டு ஓட்டுப் போடவில்லை என்றால், கடவுள் உங்களுக்கு தண்டனை அளிப்பார். சொன்னபடி, நீங்கள் எனக்கு ஓட்டளித்தால், பிறகு கோவில் கட்ட நிதி கொடுப்பேன்.
இவ்வாறு துரைமுருகன் பேசினார்.
Advertisement

இவர் இதுபோன்று பேசவில்லை என்றால் இவர் கோபாலபுரத்து விசுவாசியாகவே இருக்க முடியாது ஆதலால் இவர் இப்படித்தான் பேசுவார் கடவுளை இவர் பூஜிப்பார் தொழுவார் அலங்கரிப்பர் ஆனால் மக்களிடயே இவர் ஒரு நாத்திகனாகவே அறிவிப்பார் ஏனென்றால் கோபாலபுரத்து முதன்மை தொண்டனாக நீடிக்க வேண்டாமா அங்கேதான் அடிக்குது