Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ்

Advertisement


 தேர்தல் செலவு எல்லை மீறினால் ஊழலாக கருதப்படும்; வேட்பாளர்களுக்கு ஆணையம் எச்சரிக்கை

 தேர்தல் செலவு எல்லை மீறினால் ஊழலாக கருதப்படும்; வேட்பாளர்களுக்கு ஆணையம் எச்சரிக்கை
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

கோவை: 'சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ரூ.40 லட்சத்தை கடந்து செலவழித்தால், ஊழலாக கருதப்படும்' என, தேர்தல் ஆணையம் எச்சரித்திருக்கிறது.

தமிழக சட்டசபை தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. போட்டியிடும் வேட்பாளர்கள் ஒவ்வொருவரும், 40 லட்சம் ரூபாய் வரை மட்டுமே செலவிட வேண்டும் என தேர்தல் ஆணையம் நிர்ணயித்திருக்கிறது. வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்களை கண்காணிக்க, ஒவ்வொரு தேர்தலின் போதும் ஆணையம் தரப்பில் குழு அமைக்கப்படுகிறது. செலவினங்களை எவ்வாறு கணக்கிட வேண்டும், பறக்கும் படையினர் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது தொடர்பாக, அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

கோவையில் நடந்த கூட்டத்தில் தேர்தல் பிரிவினர் கூறிய அறிவுறுத்தல்:சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தல் செலவின தொகையாக ரூ.40 லட்சம் என ஆணையம் நிர்ணயித்துள்ளது. அதை மீறி செலவு செய்தால், 1951ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 77(3) மற்றும் பிரிவு 123(6)ன் படியும், உச்ச நீதிமன்ற உத்தரவு படியும் ஊழலாக கருதப்படும். உண்மைக்கு மாறாக செலவு கணக்கு தாக்கல் செய்திருப்பது கண்டறியப்பட்டால், வேட்பாளர் தகுதி நீக்கம் செய்யப்படுவார்; மூன்றாண்டுக்கு நடைமுறையில் இருக்கும்.

அரசியல் கட்சிகளின் வங்கி கணக்குகள், வேட்பாளர்களின் குடும்ப உறுப்பினர்களின் வங்கி கணக்குகள் ஆணையத்தால் கண்காணிக்கப்படும். சட்டத்துக்கு உட்பட்ட செலவு, சட்டத்துக்கு புறம்பான செலவு என இரு வகையாக கணக்கிடப்படும். வேட்பாளர் அலுவலகம், அனுமதி பெற்ற பொதுக்கூட்டம், ஊர்வலம், கொடி, போஸ்டர், விளம்பரங்கள், பிரசாரத்துக்கு அனுமதி பெற்ற வாகனங்கள் பயன்படுத்துதல், உடன் வரும் ஆதரவாளர்களுக்கு உணவளித்தல் போன்றவை சட்டத்துக்கு உட்பட்ட செலவினம். தேர்தல் ஆணைய விலை பட்டியல் அடிப்படையில் கணக்கிடப்படும்.

அரசு, பொது இடங்களில் சுவர் விளம்பரம் செய்வது, பிளக்ஸ் பேனர், அனைத்துவிதமான பிளாஸ்டிக் பேனர்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. ஓட்டளிக்க பணம் கொடுத்தல், மதுபானம் வினியோகித்தல், இதர விதங்களில் வாக்காளர்களை கவர்வதற்கு பரிசுப் பொருட்கள் வழங்குதல் சட்டத்துக்கு புறம்பான தேர்தல் செலவினங்கள். இந்திய தண்டனை சட்டத்துக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

ஒவ்வொரு தொகுதிக்கும் தேர்தல் பிரச்சாரங்களை வீடியோ எடுக்கும் குழு நியமிக்கப்படும். மூன்று பறக்கும் படை அமைக்கப்படும். ஓட்டுப்பதிவுக்கு ஒரு வாரத்துக்கு முன் குழுக்கள் பலப்படுத்தப்படும்; கூடுதல் குழுக்கள் ஏற்படுத்தப்படும். 24 மணி நேரமும் செயல்படும் வகையில், மாவட்ட அளவில் கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்படும்.இவ்வாறு அறிவுறுத்தப்பட்டது.

Advertisement

மார் 08, 2026 10:07 am

தொகுதி வாக்காளர் எண்ணிக்கைக்கேற்ப இந்த செலவுப்பணம் அளவீடு செய்யப்பட வேண்டும். ஒவ்வொரு ஓட்டுக்கு இவ்வளவுன்னு ஒரு கணக்கு இருக்குல்ல, என்ன சரிதானே விகடனாரே!

Reply Rate this
மார் 08, 2026 07:35 am

நீங்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம், நீதிமன்றம் ஒப்புக் கொள்ள வேண்டுமே!

Reply Rate this
மார் 08, 2026 12:24 am

வாய்பே இல்லை. ஏதோ ஒரு சிறு சுயேட்சை மட்டுமே மாட்டுவான்...மற்ற ஏனைய பெருச்சாளிகள் தப்பித்து விடும். அன்பளிப்பு, சடங்குகள் மொய்ப்பணம், திருமங்கலம் ஃபார்முலா, ஈரோடு ஃபார்முலா ஒன்றையும் ஒழிக்க முடியாது...

Reply Rate this
மார் 07, 2026 11:02 pm

Jackpot for All Election etc Govt Officials to Extract MegaCommissions from All Parties

Reply Rate this
மார் 07, 2026 10:04 pm

ஓராண்டுக்காவது ஜனாதிபதி ஆட்சியை அறிவியுங்கள்..தி.மு.க ஆட்சியில் நேர்மையான தேர்தல் சாத்தியமே இல்லை.

Reply Rate this
உன் ஆசை மக்கள் ஆசை கிடையாது
ஊழல் குற்றம் செய்த நபர்கள் போட்டியிட தடை விதிக்க வேண்டும்
இதை முதலில் செய்தால் எந்த பிரச்சனையும் வராது
மார் 07, 2026 11:08 pm
Rate this
மார் 07, 2026 10:00 pm

என்ன சொல்ல வரீங்க சார்? தேர்தலுக்கு செலவழிக்கும் 99 சதவிகித பணமும் நேர்மையாக சம்பாதித்தது அல்ல. எல்லாம் ஊழல் செய்து வந்ததுதான். கட்சியில் இருப்பவன் ஊழல் செய்து சம்பாதித்தது. புதியதாக கட்சி துவங்கி செலவு செய்பவனுக்கு, வேறு நாடுகளிலிருந்தும், மற்ற ஊழல் செய்தவர்களிடமிருந்தும்தான் பணம் வருகிறது. ஒருவனும் தன்னுடைய சொந்தக்காசில் தேர்தலுக்கு செலவு செய்யவே முடியாது.

Reply Rate this
மார் 07, 2026 09:49 pm

மக்களின் நம்பிக்கை பெற குறைந்த பட்சம் பத்து திமுக வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் .

Reply Rate this