Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு

Advertisement


 எங்களுக்கு தி.மு.க., அரசு பங்கு கொடுக்கிறது: முஸ்லிம் லீக்

 எங்களுக்கு தி.மு.க., அரசு பங்கு கொடுக்கிறது: முஸ்லிம் லீக்
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை: ''சட்டசபை தேர்தலில், தி.மு.க.,விடம் ஐந்து தொகுதிகளை கேட்டு பெறுவோம்,'' என, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் காதர் மொய்தீன் தெரிவித்தார்.
சென்னை ராயபுரத்தில், முஸ்லிம் லீக் மாநில செயற்குழுக் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில், 'வந்தே மாதரம்' பாடுவது கட்டாயம் என்ற அறிவிப்பை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்திற்கு பின், காதர் மொய்தீன் அளித்த பேட்டி:

தமிழகம் முழுதும் 8,000 மகஹாலா ஜமாத்துகள் உள்ளன. தி.மு.க., ஆட்சி தொடர வேண்டும் என அவர்கள் தீர்மானித்துள்ளனர். அதன்படி, வரும் சட்டசபை தேர்தலில், முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த ஆண், பெண் அனைவரும், தி.மு.க., தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்குதான் ஒட்டுமொத்தமாக ஓட்டளிப்பர்.
தமிழகத்தில் 40 லட்சம் முஸ்லிம் ஓட்டுகள் உள்ளன. அதன் அடிப்படையில், கடந்த 2011ல் முஸ்லிம்களுக்கு 16 தொகுதிகளை வழங்குமாறு கோரினோம். அதன்படி தி.மு.க., கூட்டணியில் வழங்கினர். அதில், முஸ்லிம் லீக்கிற்கு ஐந்து தொகுதிகளை தி.மு.க., ஒதுக்கியது.
வரும் சட்டசபை தேர்தலுக்காக, 20 தொகுதிகளை தேர்வு செய்துள்ளோம். அதில், ஐந்து தொகுதிகளை முஸ்லிம் லீக்கிற்கு பெற்று ஏணி சின்னத்தில் போட்டியிடுவோம்.
ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை அல்ல. ஏனெனில், தி.மு.க., அரசு எங்களுக்கு அனைத்திலும் பங்கு கொடுக்கிறது.

பங்கு கொடுக்காமல் எங்களை ஒதுக்கவில்லை. காங்கிரசில் ஒரு சிலர், ஆட்சியில் பங்கு வேண்டும் என்கின்றனர். இதை, அக்கட்சி தலைமை ஏற்றுக் கொண்டதா என தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

பிப் 18, 2026 02:31 pm

இந்த ஆளு பேச்சை எல்லாம் யாரும் சீரியசா எடுத்துக்கவேணாம்.டம்மி

Reply Rate this
பிப் 18, 2026 12:06 pm

கமிஷன்ல பங்கா

Reply Rate this
பிப் 18, 2026 11:28 am

மசூதிகளும் சர்ச்சுகளும் அரசியல் கட்சியை ஆதரிக்கலாம்...ஆனால் இந்து மடங்களோ மடாதிபதிகளோ ஆதரவு தெரிவித்தால் மாதவம் என்று ஒப்பாரி வைப்பார்கள்.. இந்துக்கள் திருந்தினால் பாரதம் பாதுகாப்பாய் இருக்கும்.

Reply Rate this
பிப் 18, 2026 11:19 am

திருப்பரம்குன்றத்தில் பிரச்னையை ஆரம்பித்து வைத்தவர்கள். எண்ணிக்கை கூடியவுடன் சமுதாய பிரச்சனைகளை ஆரம்பித்து வைப்பார்கள். போலி திராவிட கட்சிகள் பிரிவினையை உண்டாக்கி குளிர்காய காத்து கொண்டு இருக்கிறது.

நில அபகரிப்பு தான் அவர்களின் முதல் திட்டம். அதற்கு பின்னால் நிலத்தின் உரிமையாளர்களை வன்முறை மூலம் காலி செய்ய வைப்பார்கள். இது தான் அவர்கள் நடைமுறை.

Reply Rate this
பிப் 18, 2026 11:13 am

உங்க ஓட்டை திருட்டு திராவிஷ ரவுடிகளுக்கு போட்டு விட்டு, நீங்க என்ன வேணும்னாலும் செய்யலாம். எங்க வேணாலும் பிரியாணி சாப்பிடலாம். ஆனா அடிக்கிற கொள்ளயில பங்கு கேட்கக் கூடாது.

Reply Rate this
பிப் 18, 2026 10:15 am

தமிழ் நாடு பூராவும் வக்ஃபு வாரியத்திற்கு கச்சத் தீவை தாரை வார்த்தது போல செய்ய வேண்டுமாம்...

Reply Rate this
பிப் 18, 2026 10:07 am

உங்களுக்கு இல்லாமையா..அரசாங்கமே உங்களோடதுதான் ..உங்களுக்கும் , மற்றும் மிசினரிகளுக்கும் ,கட்டுமர குடும்பத்துக்குத்தான்..வேற யாருக்கும் இல்ல ..

நீ உண்மையான முஸ்லிமா இருந்தா தமிழ்தாய் வாழ்த்து எதிர்த்து குரல் குடுத்து பாரேன் பாப்போம் ...ஏன்னா உங்களால அதுமட்டும் செய்ய முடியாது

Reply Rate this
பிப் 18, 2026 09:51 am

மக்களிடம் சாராயம் மற்றும் போதை மருந்து விற்று , ஊரை அடித்து கொள்ளை அடித்து , கனிம வளங்களை திருடி விற்று மக்களை ஏமாற்றி சேர்த்தபணத்தில் பங்கு கிடைத்தால் அதை இவர்கள் முழுமனதுடனும் மகிழ்ச்சியுடனும் இறைவனுக்கு அர்ப்பணிப்பார்களா ? அல்லது நம்பிக்கையுடன் இவர்கள் வழிபடும் இறைவன் தான் ஏற்றுக்கொள்வாரா ?

Reply Rate this
பிப் 18, 2026 09:44 am

தேசம் மற்றும் நாட்டுநலன் இவற்றிற்கு எதிரானவர்கள், தீவிரவாதம், அடிதடி, கொள்ளை, கற்பழிப்பு, ரவுடியிசம் போன்றவற்றிற்கு நேரடியாகவோ மறைமுகவோ துணைபோகும் சக்திகள் ஆகியவை எப்போதும் திமுகவிடம் பங்குகேட்காது. வந்தேமாதரம் பாடுவதை திரும்பபெறவேண்டும் என்று சொல்பவர்கள் நாட்டுக்கு தேவையில்லை. அதற்கு அவர்களுக்கு எவ்வித உரிமையும் கிடையாது. அப்படி சொல்பவர்களை நாட்டை விட்டு விரட்டவேண்டும், அல்லது சிறையில் அடைக்கவேண்டும்.

Reply Rate this
பிப் 18, 2026 09:38 am

ஆமாய்யா.... உங்களுக்கு, கிறிஸ்தவர்கள் கொடுத்து மீதி இருக்கும் காலி பாத்திரத்தை கழுவி ஊற்றுவார்கள் இந்துகளுக்கு.

Reply Rate this