மகனுக்கு போட்டி: ராஜ்ய சபா தேர்தலில் உதவியாளரை வேட்பு மனு தாக்கல் செய்ய வைத்தார் ராமதாஸ்
ராஜ்யசபா தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்ய, கடைசி நாளான நேற்று பிற்பகல் 3:00 மணி வரை அவகாசம் இருந்த நிலையில், 2:59 மணிக்கு பா.ம.க., நிறுவனர் ராம தாசின் உதவியாளர் சுவாமிநாதன் திடீரென வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இது தொடர்பாக சுவாமி நாதனிடம் கேட்டபோது, “ராஜ்யசபா தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ வேட்பாளராக, பா.ம.க., கட்சி யின் நிறுவனர் ராமதாஸ் என்னை அறிவித்துள்ளார். அதை தொடர்ந்து, நேற்று பிற்பகல் 2:59 மணிக்கு வேட்பு மனு தாக்கல் செய்துள்ளேன்," என்றார்.
ராஜ்யசபா தேர்தலில் ஒருவரது வேட்பு மனு ஏற்கப்பட வேண்டுமானால், 10 எம்.எல்.ஏ.,க்கள் முன்மொ ழிய வேண்டும். ஆனால், ராமதாஸ் தரப்புக்கு ஜி.கே.மணி, அருள் ஆகிய இரண்டு எம்.எல்.ஏ.,க்கள் மட்டுமே உள்ளனர்.இது பற்றி சுவாமிநா தனிடம் கேட்டபோது, "தேர்தல் கமிஷனின் முழு வழிகாட்டுதலையும் பின் பற்றி வேட்பு மனு தாக்கல் செய்துள்ளேன்," என்றார்.
ராஜ்யசபா தேர்தலில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வேட்பு மனுக்கள், இன்று காலை 11:00 மணிக்கு பரிசீலனை செய்யப்பட உள்ளன. சுவாமிநாதனின் வேட்பு மனுவை, 10 எம்.எல்.ஏ.,க்கள் முன் மொழியவில்லை எனில் அவரின் மனு தள்ளுபடி செய்யப்படும்.
Advertisement
வெற்றிவாய்ப்பே இல்லை . முதலிலேயே மனு நிராகரிக்கப்படும் . எம் எல் ஏ க்கள் ஒட்டு போட்டால்தான் வெற்றி. ஒட்டு போட ஆள் இல்லை எதற்கு இந்த வீம்பு ?
இப்படி குடும்பம் மட்டுமே அனுபவிச்சா கட்சி கட்சின்னு காத்திட்டு போஸ்ட் ஓட்டிட்டு இருக்கானே அவன்
There are many who should retire from politics , one among is Mr Ramadoss Senior
மகனின் வளர்ச்சியைத் தடுக்க கங்கணம் கட்டிக் கொண்டு அலையும் தந்தை. தி.மு.கவுடன் உறவு வைத்தும் கூட அவர்களின் குடும்பப் பாசத்தை பாடமாக அறிந்தும் கூட இவர் பாடம் கற்றுக் கொள்ளவில்லையே?

ஹாஹா பாமக க்கு இருப்பதே 3 MLA ரெண்டு பேர் ராமதாஸ் ஆதரித்தாலும் திமுக அவருக்கு ஆதார வளிக்காது ADMK அன்புமணிக்கு ஆதரவு இதுபோன்ற வயதானவர்கள் பக்குவமாக நடந்து கொள்ளவேண்டும்