கிறிஸ்துவர் என்பதை மறைத்த செல்வப்பெருந்தகை மீது நடவடிக்கை தேவை: பா.ஜ.,
சென்னை: தமிழக பா.ஜ., தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை:
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த அழைப்பிதழின் வாசகங்கள், அவர் கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவர் என்பதை உறுதிப்படுத்துகின்றன. அவர் எந்த மதத்தினராகவும் இருப்பதில் எந்த பிரச்னையும் இல்லை; ஆட்சேபனையும் இல்லை.
ஆனால், செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ.,வாக வெற்றி பெற்ற ஸ்ரீபெரும்புதுார் சட்டசபை தொகுதி, பட்டியலின சமுதாயத்திற்கு ஒதுக்கப்பட்டது.
மாற்று மதத்தை பின்பற்றுவோர், அதை மறைத்து, பட்டியலின தொகுதியில் போட்டியிட்ட நிலையில், அவர்களை உச்ச நீதிமன்றம் தகுதியிழப்பு செய்துள்ளது.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மீறி, உண்மையை மறைத்து, பட்டியலினத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகுதியில் செல்வப்பெருந்தகை போட்டியிட்டது தெளிவாகிறது.
தெரிந்தே குற்றச்செயலில் ஈடுபட்ட செல்வப்பெருந்தகை மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்