/ செய்திகள் / கோவில்பட்டியில் வைகோ போட்டி? தனி சின்னத்தில் களமிறங்குகிறார்!

கோவில்பட்டியில் வைகோ போட்டி? தனி சின்னத்தில் களமிறங்குகிறார்!

- நமது நிருபர் - தி.மு.க., சார்பில் ராஜ்யசபா எம்.பி., பதவி எதிர்பார்த்து கிடைக்காததால், சட்டசபை தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிட, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தி.மு.க., கூட்டணியில் ம.தி.மு.க.,வுக்கு நான்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவற்றில், ஒரு தொகுதியில் தனி சின்னத்திலும், மூன்று தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிட ஒப்பந்தமாகி உள்ளது. இந்நிலையில், கோவில்பட்டி தொகுதியில் தனி சின்னத்தில் வைகோ போட்டியிட வேண்டும் என கட்சியினரும், நாயுடு சமூகத்தினரும் வலியுறுத்தியுள்ளனர். ம.தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது: தி.மு.க., கூட்டணியில் ம.தி.மு.க.,வுக்கு நான்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, தேர்தல் செலவையும் தி.மு.க., ஏற்றுக் கொண்டுள்ளது. எனவே, எங்களுக்கு அதிருப்தி இல்லை. மூன்று முறை ராஜ்யசபா எம்.பி.,யாகவும், இரு முறை லோக்சபா எம்.பி.,யாகவும் வைகோ இருந்துள்ளார். கடந்த 1996 சட்டசபை தேர்தலில், விளாத்தி குளத்தில் போட்டியிட்டு தோல்வி அடைந்த பின், சட்டசபை தேர்தலில் அவர் போட்டியிடவில்லை. 2021 தேர்தலில், கோவில்பட்டி தொகுதியில் போட்டியிட விரும்பினார். ஆனால், கடைசி நேரத்தில் போட்டியிடுவதை தவிர்த்தார். தற்போது ராஜ்யசபா எம்.பி., பதவியை எதிர்பார்த்தார்; கிடைக்கவில்லை. இந்நிலையில், சட்டசபையிலும் அவரது குரல் ஒலிக்க வேண்டும் என ம.தி.மு.க.,வினர் விரும்புகின்றனர். கோவில்பட்டியில் உள்ள நாயுடு சமூகத்தைச் சேர்ந்த தொழிலதிபர்களும், வைகோ போட்டியிட வலியுறுத்தியுள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 33 )

தமிழன்
மார் 13, 2026 22:43

இந்த ஆள் ஒரு செல்லாத காசு. பழைய பழுதான பாத்திரம். தமிழ்நாட்டுக்கு உதவாத மணிதர். ஆனால் திமுக கூட்டணிக்கு எவர் வந்தாலும் தேவை.


sankaranarayanan
மார் 13, 2026 21:23

ஜாதி இல்லை ஜாதி இல்லை என்று பறை சாற்றும் தி.மு.க.வினருக்கு இது ஒரு எச்சரிக்கை இவர் கோவில்பட்டியில் நாயுடு சமுதாய மக்களுக்காக போட்டி இடுகிறாராம் சொல்லவே வெட்கமாக இல்லை பல முறை சட்ட மன்ற பாராளுமன்ற உறுப்பினராக வகித்துவிட்டு ஒரு சமுதாயத்தினருக்குக்காக இப்போது ஒரு ஜாதி பிரிவினருக்கான போட்டி இடுகிறேன்


SENTHIL NATHAN
மார் 13, 2026 17:02

சுயமறியாத உள்ள கோவில் பட்டி மக்கள் மட்டுமல்ல யாறுமே இந்த மாதிரி பச்சோந்திகலுக்கு வாக்கலித்து தங்கலிண் பொன்னான வாக்குகளை வீணாக வேண்டாம்


ரவி
மார் 13, 2026 14:09

எப்புடி இருந்த நான் இப்புடி ஆயிட்டேன்!


பேசும் தமிழன்
மார் 13, 2026 14:04

வைகோ பேசாமல் தன் பெயரை மாற்றி மானஸ்தன் என்று வைத்துக் கொள்ளலாம்.... அந்தளவுக்கு நல்லவர் ?


எஸ் எஸ்
மார் 13, 2026 13:21

2016இல் இதே தொகுதியில் போட்டியிட முடிவு செய்து வேட்பு மனு தாக்கல் செய்யும் நிமிடம் வேறு ஒருவரை தாக்கல் செய்ய வைத்தார். எனவே இதுவும் மாறலாம்!


Ms Mahadevan Mahadevan
மார் 13, 2026 13:20

ரெட்டையிர்மெண்ட் தான் மக்கள் கொடுப்பார்கள். ஓய்வெடுங்கள் பெரியவரே


s vinayak
மார் 13, 2026 12:28

கடலை மிட்டாய் கொடுத்து அனுப்புங்கள் தமிழ் வாக்காளப் பெருமக்களே


s vinayak
மார் 13, 2026 12:26

பெட்டி கோபாலுக்கு இனி இறங்கு முகம்தான். அடுத்து வீட்டுக்கு அனுப்ப வேண்டியதுதான்.


Sun
மார் 13, 2026 11:20

கோவில்பட்டியில் நின்றாலும் சரி, இல்லை கொட்டாம்பட்டியில் நின்றாலும் சரி ஒரு காலத்தில் வீரவசனம் பேசிய இந்த தி.மு.கவின் அடிமைக்கு எங்கு நின்றாலும் தோல்வி உறுதி.