டாஸ்மாக்கை மூடாதவர்கள் கள் பற்றி பேசுவதா: தமிழிசை
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே கரம்பயத்தில், பா.ஜ.,வின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு தொடர்பாக, விவசாயிகளிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நடந்தது. அதில், தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் தமிழிசை பங்கேற்று பேசியதாவது: தமிழகத்திற்கு, 'முட்டை பட்ஜெட்' என கூறி, தி.மு.க.,வினர் போஸ்டர் அடித்தனர். தமிழகத்திற்கு, மத்திய பட்ஜெட்டில் ஒன்பது திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒரு கோழி முட்டை குஞ்சு பொரித்து, கோழியாகி, மறுபடியும் முட்டை போடும்; குஞ்சு பொரிக்கும். அப்படியாக, பிரதமர் மோடியின் மத்திய பட்ஜெட், கோழிப் பண்ணையாகவே மாறும். தெலுங்கானாவில், தென்னை விவசாயிகள் நலனுக்காக, நீரா விற்பனைக்கு, அங்கு நான் கவர்னராக இருந்த போது ஒப்புதல் அளித்தேன். புதுச்சேரியில் கள்ளுக்கடை உள்ளது. டாஸ்மாக்கை மூடாதவர்கள், கள்ளை பற்றி பேசலாமா? இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
வாசகர்கள் கருத்துகள் ( 2 )
சாராயம் எவ்வளவு கேவலமானதோ அதே அளவு கேவலமான விஷயம் தான் கள்ளும் இதில் என்ன பெரிய வித்தியாசம்??
பாண்டிச்சேரியில் ஒரு மது பார், அவர் கவர்னராக இருந்தபோது திறந்துவைத்தார்,
மேலும் செய்திகள்
காங்கிரசுக்கு ராஜ்யசபா சீட்; தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் திமுக உறுதி
பிப் 28, 2026 12:40 pm