Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ்

Advertisement


 சொன்னது எதையும் செய்யாத தி.மு.க., அரசு

 சொன்னது எதையும் செய்யாத தி.மு.க., அரசு

சாத்தான்குளத்தில் லாக் - அப் மரணம் நடந்தபோது, அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின், சட்டையை கிழித்துக் கொண்டு ஒடி வந்தார். தற்போது, தமிழகத்தில் 34 லாக் - அப் மரணங்கள் நடந்துள்ளன.

சொத்து வரியை உயர்த்த மாட்டோம் என தி.மு.க., அரசு தரப்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், 300 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. மின் கட்டணம் மாதம் ஒருமுறை கணக்கெடுப்பு செய்வதாக சொன்னார்கள். சிலிண்டருக்கு 100 ரூபாய், பெட்ரோலுக்கு 10 ரூபாய், டீசலுக்கு 5 ரூபாய் குறைப்பதாக சொன்னார்கள். எதையும் செய்யவில்லை. ஆயிரம் தடுப்பணைகள் கட்டுவோம் என சொல்லப்பட்டது; ஒரு தடுப்பணைக்கூட கட்டவில்லை. ஆண்டுக்கு 200 டி.எம்.சி., தண்ணீர் கடலில் கலக்கிறது.

முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில், சட்டம் - ஒழுங்கு என்பதே இல்லை. தமிழகத்தில் படுகொலை தினமும் நடக்கிறது. அதேபோன்று கஞ்சா போதையில் விரட்டி விரட்டி வெட்டுகின்றனர்.

- நயினார் நாகேந்திரன், தலைவர், தமிழக பா.ஜ.,

Advertisement