Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு

Advertisement


 தே.மு.தி.க.,வில் விருப்ப மனு பிரேமலதா அறிவிப்பு

 தே.மு.தி.க.,வில் விருப்ப மனு பிரேமலதா அறிவிப்பு

சென்னை: ''தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டசபை தேர்தலில், தே.மு.தி.க., சார்பில் போட்டியிட விரும்புவோர், இன்று முதல் விருப்ப மனு அளிக்கலாம்,'' என, அக்கட்சியின் பொதுச்செயலர் பிரேமலதா அறிவித்து உள்ளார்.

அவரது அறிக்கை:

தமிழக சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும், புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும், தே.மு.தி.க., சார்பில் போட்டியிட விரும்புவோர், இன்று முதல் வரும் 12ம் தேதி வரை விருப்ப மனு அளிக்கலாம்.

தமிழகத்தில் பொது தொகுதியில் போட்டியிட 15,000 ரூபாயும், தனி தொகுதியில் போட்டியிட 10,000 ரூபாயும் கட்டணம் செலுத்த வேண்டும்.

புதுச்சேரியில் பொது தொகுதியில் போட்டியிட 10,000 ரூபாயும், தனி தொகுதியில் போட்டியிட 5,000 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement