முதல்வரை தளபதி... தளபதி என புகழ்ந்த பன்னீர்செல்வம்
மதுரை: முதல்வர் ஸ்டாலினை, 'தளபதி, தளபதி...' என வார்த்தைக்கு வார்த்தை புகழ்ந்தார் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்.
தி.மு.க., வில் இணைந்த பின் சொந்த ஊருக்கு செல்வதற்காக சென்னையிலிருந்து மதுரை விமான நிலையம் வந்த பன்னீர்செல்வம் கூறியதாவது:
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் உடன்பிறப்புகள், என்னை உடன் பிறந்த சகோதரர் போல மதித்து வரவேற்பு அளித்து வருகின்றனர். ஸ்டாலின் என்ன கட்டளையிடுகிறாரோ அதன்படிதான் நடப்பேன். நான் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க., வில் இணைந்துள்ளேன். அவர் போட்டோவை வைப்பது தவறு இல்லை. எத்தனை கூட்டம் நடத்தினாலும் தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணி படுதோல்வி அடையும்.
மதுரை அ.தி.மு.க., கூட்ட மேடையில் ஈ.வெ.ரா., படத்தை அகற்றியுள்ளனர். ஏழை மக்கள் சம நோக்குடன் வாழ வேண்டும் என்று வாழ்ந்தவர் படத்தை எடுத்தது கண்டனத்துக்குரியது என்றார்.
முதல்வர் ஸ்டாலினின் பெயரை குறிப்பிடாமல் வார்த்தைக்கு வார்த்தை 'தளபதி, தளபதி...' என்றே குறிப்பிட்டார்.
Advertisement
இந்த தள்ளாத வயதில் இவருக்கு தளபதி தளபதி என்று ஜபம் செய்து கொண்டே செல்ல வேண்டுமா என்னடா இவருக்கு வந்த தலை விதி யாருக்குமே வாராத வரக்கூடாத தலைவலி ஜெபம் இவருக்கு திடிரென்று எப்படி இந்த வயதில் வந்தது அய்யகோ பாபம் பரிதாபம்
அதிமுகவில் இருந்த போது பாஜகவை எதிர்த்துப் பேசிய நயினார் நாகேந்திரன் பாஜகவுக்கு கட்சி மாறி இப்போது பிரதமர் மோடியை புகழ்ந்து பேசினால் மட்டும் கேட்க இனிக்கிறதோ?
பன்னீர்செல்வம் ஜெயலலிதாவிற்கு மிகவும் விசுவாசமாக இருந்தார். அவருக்குப் பிறகு, பல ஆண்டுகளாக அதிமுகவை ஒன்றிணைக்க அவர் முயற்சி செய்தார். ஆனால் அதிமுக கட்சியிலேயே அவருக்கு யாரும் மரியாதை அளிக்கவில்லை, அவரைப் பற்றி யாரும் கவலைப்படவும் இல்லை மாறாக, அனைவரும் அவரை அவமானப்படுத்தினார்கள். எனவே, அவர் திமுகவில் இணைந்ததில் எந்தத் தவறும் இல்லை.
காசேதான் கடவுளடா என்ற கோட்பாட்டை உடையவர் எவரும் எந்த ஒரு கட்சிக்கும் நிச்சயம் விசுவாசமாக இருக்க வாய்ப்பு இல்லை.
கயிறு என நினைத்து வேறு எதையோ பிடித்து விட்டார் ஸ்டாலின். தி.மு.க, பா.ஜ.கவின் ஸ்லீப்பர் செல்லாக அ.தி.மு.கவில் இவர் இருந்தது போல் பா.ஜ.கவின் ஸ்லீப்பர் செல்லாக இருந்து கொண்டு தி.மு.கவில் இவர் ஏன் உள்ளடி வேலை செய்யமாட்டார் ?
எனி போலிக் கொள்கை இருக்க சேர இந்த தி.மு.க இந்த செய்தியிலிருந்து நாங்கள் அறிந்தது என்னவென்றால். பெரும்பாலான மக்கள் அ.தி.மு.க யில் இருந்து வந்தனர், டி.மு.க விதிகள் எதுவும் இல்லை. டி.மு.க ஒரு ஊழல் நிறுவனம், சங்கம் அல்ல. பணம் சம்பாதிப்பது நோக்கத்துடன் அ.தி.மு.க மக்கள் டி.மு.க யில் சேர வந்தனர்.
காலத்தின் கட்டாயம் "நம்பினாதான் சோறு போடுவேன்னு சொன்னாங்க உனக்கு சோறு வேணுமா இல்ல" அய்யய்யோ எனக்கு சோறு வேணும்" -சந்தானம் காமெடியை பின்னுக்கு தள்ளிய நிகஷுவு

புது தளபதிதாசன்..