Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு

Advertisement


ஆன்மிக பூமியில் தி.மு.க., வெல்வது எப்படி?: சந்தேகம் கிளப்புகிறார் தர்மேந்திர பிரதான்

ஆன்மிக பூமியில் தி.மு.க., வெல்வது எப்படி?: சந்தேகம் கிளப்புகிறார் தர்மேந்திர பிரதான்

ஒடிஷா மாநிலம், புவனேஸ்வர் விமான நிலையத்தில், தமிழ் ஊடகம் மற்றும் செய்தியாளர்களுடன், மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கலந்துரையாடினார்.

அப்போது, அவர் கூறியதாவது:

தமிழக சட்டசபை தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடக்கவுள்ளது. புதிய கட்சியாக த.வெ.க., போட்டியிடுவதால், யாருக்கு அதிக பாதிப்பு இருக்கும் என விவாதிக்கின்றனர். எங்களுக்கு கிடைத்திருக்கும் உறுதியான தகவல்படி, தி.மு.க.,வுக்குத்தான், த.வெ.க.,வால் அதிக பாதிப்பு இருக்கும்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு பின், தே.ஜ., கூட்டணி ஆட்சி அமையும். அதற்கான அரசியல் சூழல் உருவாகி உள்ளது. நான் தமிழகத்திற்கு அடிக்கடி வருவேன். ஆன்மிக பயணமாகவும் வந்துள்ளேன்.
ராமேஸ்வரத்தில் ராமநாத சுவாமி கோவில், மதுரையில் உள்ள மீனாட்சி அம்மன் கோவில், தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவில் என நிறைய கோவில்களுக்கு சென்றுள்ளேன். தமிழகத்தில் உள்ள தென் மாவட்டங்களில், பெரும்பான்மையான ஹிந்து மக்களை ஆன்மிகவாதி களாக பார்க்க முடிகிறது.
இப்படி ஆன்மிகவாதிகள் நிரம்பி இருக்கும் தமிழகத்தில், நாத்திகத்தை முன்னிலைப்படுத்தும் தி.மு.க., எப்படி வெற்றி பெறுகிறது என புரியவில்லை. இதற்கு, தமிழக மக்கள் தான் பதில் சொல்ல வேண்டும். வரும் சட்டசபைத் தேர்தல் வாயிலாக, அதற்கு விடை சொல்வர் என எதிர்பார்க்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -

Advertisement

பிப் 11, 2026 06:50 pm

காசுகள் ள ஓட்டு

Reply Rate this
பிப் 11, 2026 02:29 pm

ஆன்மீகம் வேறு. அரசியல் வேறு.

Reply Rate this
பாஞ்ச லட்ச அப்பாவி வேறு..டாஸ்மாக் அப்பாவி வேறு...ரெண்டும் உதவாக்கரை
பிப் 11, 2026 03:32 pm
Rate this
இது, மதத்தின் பெயரால் இயங்கும் சிறுபான்மையினர் அரசியல் கட்சிக்கு பொருந்துமா?
பிப் 11, 2026 05:36 pm
Rate this
ராமானுஜர் ராமலிங்கம் அடிகளார் திருவள்ளுவர் பற்றி புத்தகங்களை திரு தர்மேந்திர அவர்களுக்கு தமிழக பாஜக தொண்டர்கள் கொடுக்க வேண்டும் அப்போது தான் ஆன்மீக பற்றிய தெளிவு புரியும்.
பிப் 13, 2026 03:46 am
Rate this
பிப் 11, 2026 01:01 pm

இங்கு ஒருவர் பதிவிட்ட மாதிரி பாஜக இந்தி வாசனையை விட்டு விட்டு தமிழ்க் கலாச்சாரத்தை, வார்த்தைகளை கையில் எடுக்க வேண்டும். மோடி ஜீ, காரியகர்த்தா, சேவகர், பாரத் மாதா கி ஜெய்... இவற்றை எல்லாம் விடுத்து ஐயா, தொண்டர், பணியாளர், பாரத அன்னை, தமிழன்னை வாழ்க என்று சொல்ல வேண்டும். கேட்பார்களா?

Reply Rate this
பிப் 11, 2026 12:10 pm

தமிழகத்துல, பாஜக தனது வடஇந்திய வாசனையை குறைத்து தென்னிந்திய வாசனையை கூட்டனும்.
இந்து மதத்தில் வேதம் சார்ந்த, வேதம் சாராத மற்றும் கிராமிய மதங்கள் என பல பிரிவுகளும் அதன் பல உட்பிரிவுகளும் இருக்கும் போது, ஒரு பிரிவான சனாதனமே இந்து மதம் என்பதை ஏற்க ஏன் அழுத்தம் கொடுக்கனும்? அது இந்து ஒற்றுமைக்கு தடையாகவே அமையும். ஒருவர் சனாதனியாக இருக்க பல அம்சங்கள் இருக்கனும். அவைகள் 15% இந்துக்களுக்கே பொருந்தும். அவைகளில் வேதங்களை ஏற்பது, அனைத்தும் ஒன்றே என்பது, ஆன்மா, கர்மா, அஹிம்சா, மறுபிறவி, முக்தி போன்றவைகளில் நம்புவது அடக்கம். சைவ சித்தாந்தம் உட்பட பல சமயங்கள் வேதத்தை ஏற்பதில்லை. புலால் உண்பவர் அஹிம்சையை ஏற்கவில்லை. அனைத்தும் ஒரே பிரம்மம் என்பதை வைணவம் ஏற்கவில்லை. தனியாக ஒரு ஆன்மா (soul) இருப்பதை விஷ்ணுவின் ஒன்பதாவது அவதாரமான புத்தர் ஏற்கவில்லை. கர்மா, மறுபிறவி, முக்தி போன்றவற்றில் பல வேறுபட்ட கண்ணோட்டம் உண்டு. இந்துக்கள் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் பொதுவான வாழ்வியல் முறைகளாலேயே ஒன்றுபடுகிறார்கள் என்பதை ஏற்கனும். வேதங்கள் நிலையானது, ஆனால் ஸ்மிருதிகள் காலத்துக்கு ஏற்ப மாற்ற வேண்டியது முன்பு செய்தது போல அவைகள மாற்றி எழுத வேண்டிய காலம் இது. இதையும் புரிந்து பேசினால் தமிழகமும் பாஜக வசப்படும்.

Reply Rate this
பிப் 11, 2026 08:56 am

ஆன்மீக பூமியாக உள்ளதால்தான்சகிப்புத்தன்மை மேலோங்கி இருக்கிறது. அரக்கர்கள் அட்டூழியம் அதிகமாக உள்ளது. எதற்கும் நேரம் வரவேண்டும். பீகார் லால், மும்பை சக்தி எல்லாம் உதாரணம் உள்ளது. விடுதலை பெறுவோம்.தேஜகூ உள்ளது. ’தோற்கடிப்போம் ஒன்றாக'

Reply Rate this
பிப் 11, 2026 08:46 am

ஆன்மீக மண் என்பதால், கடவுள் தண்டித்து விடுவார் எனும் பயத்தில், இந்துமக்கள் பெரும்பாலோனோர், ஓட்டுக்கு வாங்கிய லஞ்ச தொகை, அதிகம் தரும் கட்சிக்கு, மனசாட்சியுடன் வாக்களிக்கின்றனர்...இந்த பணப்பட்டுவாடா விசயத்தில் தான், தீயசக்தி முதல் மார்க் எடுப்பவர்களாயிற்றே...!!! ஆனால் இம்முறை, இதுவும் பலிக்காமல் போகும்...அந்தளவுக்கு, மக்கள் வெறுத்துபோய் இருக்கின்றனர்...!!!

Reply Rate this
பிப் 11, 2026 08:13 am

மத .... இங்கு இடமில்லை ஜயா

Reply Rate this
கொத்தடிமைகளுக்கு இடம் இல்லை முருகா
பிப் 11, 2026 08:50 am
Rate this
பிறகு எப்படி நீ இங்கே
பிப் 11, 2026 10:56 am
Rate this
பிப் 11, 2026 07:53 am

கள்ள ஓட்டு, பூத் ஏஜென்ட் விலை போவது, அராஜகம், தேர்தல் அதிகாரிகள் மிரட்டப்படுவது, மது, மாது, பணம் ஆகியவற்றை சட்ட விரோதமாக பயன்படுத்தி கள்ள ஆட்சி பிடிக்கும் திமுக.

Reply Rate this
பிப் 11, 2026 07:40 am

அதை தான் அவரும் கேட்டு இருக்கிறார். மக்கள் ஓட்டு போட்டு வெற்றி பெறுகிறார்களா இல்லை ஏதாவது செய்கிறார்களா என்று கேட்கிறார். போதாத குறைக்கு பழனிச்சாமி புண்ணியத்தால். எதிர்கட்சிகள் பிரிந்து போட்டியிட்ட காரணத்தால் வெற்றி பெற்றீர்கள். ஆனால் இப்போது வாய்பில்லை ராசா..... வாய்ப்பே இல்லை.

Reply Rate this
பிப் 11, 2026 07:19 am

இவர் எதுக்கு தமிழகத்தைப்பற்றி ஒடிசாவில் இருந்து புலம்புகிறார். இதுவரை ஆன்மீக பூமியில் தி மு க ஆட்சிதான் நடக்குது.

Reply Rate this
நீ எதுக்கு ஒரு நசுங்கி போன திராவிட சொம்புடன் சிட்னியில் சுற்றி கொண்டு இருக்கிறார்
பிப் 11, 2026 08:51 am
Rate this