Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ்

Advertisement


ஆட்சியின் இறுதி நாட்களிலும் மக்கள் மூச்சை திணறடிக்கிறது திமுக: அண்ணாமலை

ஆட்சியின் இறுதி நாட்களிலும் மக்கள் மூச்சை திணறடிக்கிறது திமுக: அண்ணாமலை
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை: திமுக அரசு அதன் இறுதி நாட்களில் கூட, தமிழக மக்களை தொடர்ந்து மூச்சுத் திணறடித்து வருகிறது என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.

தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கஞ்சா மயத்தால் தமிழகத்தைக் கொலைக்களமாக்கிய திமுக அரசு. திருநெல்வேலி மாவட்டம் பெரும்பத்து பகுதியில் கஞ்சா போதையில் 6 இளைஞர்கள் டீக்கடையில் இருந்த இரண்டு பேரை அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்திருப்பதாக வெளிவந்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

கடந்த 5 ஆண்டுகளாக நகரங்கள், கிராமங்கள் என்ற வித்தியாசமின்றி திக்கெட்டும் கஞ்சா புழக்கம் அதிகரித்து, தமிழக இளைஞர்களின் வாழ்வைச் சீரழிப்பதோடு, பொதுமக்களின் பாதுகாப்பையும் சிதைத்து வருவது கொடூரமானது.

தனது திறனற்ற நிர்வாகத்தால் எங்கு பார்த்தாலும் கஞ்சா மயமாக்கி, தமிழகத்தின் சட்டம் ஒழுங்கையும் மக்கள் நலனையும் ஒரு சேர கொன்றுவிட்டு, 'வெல்வோம் ஒன்றாக' என்று திமுக அரசு சூளுரைப்பது வெட்கக்கேடானது. இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.


தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கை: திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி அருகே உள்ள பெரும்பத்து கிராமத்தில், குடிபோதையில் இருந்த ஒரு கும்பல் ஒரு கிராமத்திற்குள் நுழைந்து, கொடிய ஆயுதங்களுடன் தாக்குதலைத் தொடங்கியது. செங்கல் சூளையில் வேலை செய்து கொண்டிருந்த ஒடிசாவைச் சேர்ந்த ஜான் மற்றும் திரிநாத் கட்டா ஆகியோர் தற்செயலாக அந்தப் பகுதி வழியாக சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலில் மேலும் 6 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருகின்றனர்.

இந்த ஊழல் நிறைந்த திமுக அரசின் கீழ் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு மோசமான நிலை இதுதான். கடந்த 5 ஆண்டுகளில் 65,000 கிலோவுக்கும் அதிகமான கஞ்சாவும், 8000 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இது கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் மாநிலத்தில் எந்த அளவுக்கு ஊடுருவியுள்ளன என்பதைக் காட்டுகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளாக மாநிலத்தை பாதித்த வன்முறை மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, திமுக அரசு அதன் இறுதி நாட்களில் கூட, தமிழக மக்களை தொடர்ந்து மூச்சுத் திணறடித்து வருகிறது. இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.

அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கை: திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் அடையாளம் தெரியாத கும்பல் பெட்ரோல் குண்டு வீசி நடத்திய வெறியாட்டத்தில் 2 பேர் உயிரிழந்தனர். பொதுமக்களைப் பாதுகாக்கத் தவறிய கஞ்சா மாடல் திமுக அரசை வரும் தேர்தலின் மூலம் நிரந்தரமாக வீட்டிற்கு அனுப்புவோம். தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இது போன்ற குற்றச் சம்பவங்களைத் தடுத்து நிறுத்தவோ, அதற்கு அடிப்படைக் காரணமான கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தவோ எந்தவித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசால், எந்த குற்றமும் செய்யாத அப்பாவிகள் பலரும் படுகொலை செய்யப்படுவது வாடிக்கையாகி வருகிறது.

கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் போன்ற சட்டம் ஒழுங்கு சீர்கேட்டைக் களைந்து பொதுமக்களுக்கு உரியப் பாதுகாப்பு வழங்க வேண்டிய திமுக அரசு, அன்றாடம் அரங்கேறும் குற்றங்களைத் தடுக்க தவறியும், அதனைத் திசை திருப்பும் நோக்கத்தில் உதவித் தொகை எனும் பெயரில் பணம் கொடுத்து மக்களை சரிக்கட்ட நினைப்பது வரும் சட்டமன்றத் தேர்தலில் ஒருபோதும் செல்லுபடியாகாது.

இத்தகைய கொடூரச் செயல்களை அரங்கேற்றிய அடையாளம் தெரியாத நபர்கள் யாராக இருந்தாலும் அவர்களைக் கைது செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தும் அதே நேரத்தில், அமைதிப் பூங்காவாகத் திகழ்ந்த தமிழகத்தைச் சட்டம் ஒழுங்கு என்றால் என்ன என்று கேட்கும் நிலைக்குத் தள்ளிய திமுகவின் ஆட்டமும் கொட்டமும் வரும் சட்டமன்றத் தேர்தலோடு முடிவடைவது உறுதி என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு தினகரன் கூறியுள்ளார்.

Advertisement

மார் 03, 2026 08:35 pm

போய் டில்லில நல்லா மூச்சு புடிச்சு சுவாசியுங்க. ஏர் குவாலிட்டி சூப்பரா இருக்காம்.

Reply Rate this
மார் 03, 2026 04:01 pm

இதற்கு மூக்கையும் வாயையும் இறுக்கிப் பிடித்துக் கொள்ளுவதுதான் தீர்வு.

Reply Rate this
செய்து கொள்ளுங்கள்
மார் 03, 2026 04:57 pm
Rate this
மார் 03, 2026 02:18 pm

வானிடிந்த்து வீழுகின்ற போதிலும் முடியவில்லை என்பதில்லையே

Reply Rate this
மார் 03, 2026 01:11 pm

ஏதோ உளறுகிறார்

Reply Rate this
ஒவர் டைம்
மார் 03, 2026 01:35 pm
Rate this
உளறுவது நீங்கள் தான்
மார் 03, 2026 02:20 pm
Rate this
அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.
மார் 03, 2026 03:53 pm
Rate this
மார் 03, 2026 12:58 pm

திமுக அரசை தேர்தலில் தோற்கடிப்பது மட்டும் போதாது. தமிழ்நாட்டில் இவ்வளவு கொலை, கொள்ளை, கற்பழிப்பு குற்றங்கள் நடந்ததற்கு எதிராக அதனை குறைப்பதற்குண்டான எந்தவொரு நடவடிக்கை எடுக்காமல் தான் எடுத்துக்கொண்ட பொறுப்புக்கு பங்கம் விளைவித்த சம்பந்தப்பட்ட யாராக இருந்தாலும் அவர்கள் மீது விசாரணை செய்து தக்க தண்டனை வழங்கவேண்டும்.

Reply Rate this
தக்க தண்டனை என்பது தீர்த்து கட்டணும். அதுதான் இவனுங்களுக்கு தக்க தண்டனை.
மார் 03, 2026 03:55 pm
Rate this
மார் 03, 2026 12:55 pm

சப்ஜெக்ட் மாற்றி பதிவு செய்திருக்கிறார். ஓட ஓட அடிவாங்கி இறந்த மனிதர்கள்... அவருக்கு இவ்வாறு நடந்தால்தான் வலி தெரியும்.

Reply Rate this
மார் 03, 2026 12:50 pm

கைம்பெண்கள் மறுவாழ்வுக்கு கலைஞர் காலத்தில் இருந்தே இந்த திட்டம் உள்ளது. அனைத்து அரசுகளும் கொடுத்து வருகின்றன. மீனவர்களுக்கான நிதி உதவி என்பது மீனவ சங்கங்களின் கோரிக்கை.. முதியோர் தொகை நீண்ட காலமாக உயர்த்தி கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றன. இந்த விஷயத்தில் எதிர்க்கட்சிகள் விமர்சனம் வைக்க முடியாது. ஏனென்றால் முதியோர் உதவித்தொகை, மீனவர்களுக்கு உதவித்தொகை, நீலகிரி தொழிலாளர்களுக்கு சிறப்பு தொகுப்பு உள்ளிட்ட எதிலும் விமர்சனம் வைக்க முடியாது. இதன் நோக்கம் பங்கேற்பார்களை பெருக்குவது தான்.. பயனாளிகளை பெருக்குவது அல்ல

Reply Rate this
முதியோர் உருவி தொகை மீனவர்களுக்கு உருவி தொகை நீலகிரி தொழிலாளர்களுக்கு சிரிப்பு தொகுப்பு இதன் நோக்கம் பங்கேற்பாளர்களை பெருக்குவது தான்.அதன் மூலம் ஓட்டையும் பெருக்குவது தான். மேலும் நம்ம கள்ள பணத்தை பெருக்குவது தான்.எதிர்க கட்சிகளுக்கு பெப்பே ஐ பெருக்குவது தான். திருவாரூர் மாவட்டத்தில் செங்கிப்பட்டி மகளிர் மாநாடு போன பொம்பளைங்க ளுக்கு வீடு வீடாய் நேரே போயி ஓட்டு கேக்க சொல்லி உத்தரவாம். அந்த பொம்பளைங்க இப்புடி மாட்டி உட்டான்களேன்னு பொலம்புறாங்களாம்.
மார் 03, 2026 04:07 pm
Rate this
மார் 03, 2026 12:49 pm

NCR டேட்டா படி தமிழகம் 21 இடம் CRIME RATE, முதல் 15 மாநிலம் பிஜேபி ஆளும் மாநிலங்கள் இங்கு பொய் பேசவேண்டியதை இங்கு பேசி கொண்டு இருக்கிறர் இந்த சிரிப்பு போலீஸ்

Reply Rate this
மார் 03, 2026 12:47 pm

விளிம்பு நிலையில் இருக்கும் சுமார் 40 லட்சம் பேருக்கு சிறப்பு நிதியாக ரூ.2,000 வரவு வைக்கப்பட்டது குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் கருத்து தெரிவித்துள்ளார். முதல்வர் ஸ்டாலினின் அறிவிப்பில் எதிர்க்கட்சிகளால் விமர்சனம் வைக்க முடியாது என்று கூறிய தராசு ஷ்யாம், முதியோர் உதவித்தொகை உயர்வு என்பது பல கால கோரிக்கை என்றும் தெரிவித்துள்ளார்.

Reply Rate this
சுருக்கமாக இதை ஒட்டு பிச்சை என்று மக்கள் கூறுகிறார்களே ,உண்மை தானே
மார் 03, 2026 12:57 pm
Rate this
ஆமாம் மோடி அன்று நடக்க வேண்டிய தேர்தல் தேதியை தள்ளி வைத்து விட்டு 10000 BEHAAR இல் கொடுத்த போது இதே தான் சொன்னார்கள்ஆகவே நீங்கள் கவலை படாதீர்கள் அதற்காக உண்ணாவிரதம் எல்லாம் வேண்டாம் என்ன அதே ரிசல்ட் தான் இங்கும் வரும்
மார் 03, 2026 01:29 pm
Rate this
முத்திப்போன பத்திரிகையாளன் இந்த ஷ்யாம். மனுஷ்யபுத்திரன் ன்னு ஒரு மேதாவி அண்டா செந்தில் ன்னு ஒருத்தர் சரவணன் ன்னு ஒருத்தர் நமக்கு முன்னாடியே வேஷம் கட்டுவாங்க. நமக்கு நேராவே வேஷம் கட்டி பின்பு நம்மகிட்ட மூஞ்சியை காமிக்குறவனுங்க.
மார் 03, 2026 04:47 pm
Rate this
ஷ்யாம் சரவணன் எல்லோருக்கும் தெரியும் உம்மை யாருக்கு தெரியும் உன் தெருவில் உன்னை கேட்டால் சொல்லுவார்களா
மார் 03, 2026 08:36 pm
Rate this
மார் 03, 2026 12:42 pm

வரும் தேர்தலில் திராவிட மாடலை தோற்கடித்து ஓட ஓட விரட்ட வேண்டும். இது காலத்தின் கட்டாயம். மக்களே சிந்தித்து வாக்களியுங்கள்.

Reply Rate this