ஜெயலலிதா தொண்டர்களை ஒருங்கிணைத்த அமித் ஷா
தமிழக சட்டசபை தேர்தல்களில், மவுன புரட்சி செய்து தான், தி.மு.க.,வை, மக்கள் வெளியேற்றுவர். கடந்த 2001 மற்றும் 2011ம் ஆண்டு தேர்தல்களை போலவே, 2026 சட்டசபை தேர்தலிலும் நடக்கும். எத்தனை பண பலத்துடனும், கூட்டணி பலத்துடனும் தி.மு.க., மோதினாலும், இந்த தேர்தலில், தே.ஜ., கூட்டணி தான் நிச்சயம் வெற்றி பெறும்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மிகவும் அன்பானவர். பா.ஜ., கொள்கை பிடிப்பு கொண்ட கட்சி. தி.மு.க.,வை வீழ்த்த வேண்டும் என்பதில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதியாக உள்ளார். அதனால்தான், பிரிந்து கிடந்த ஜெயலலிதாவின் தொண்டர்களை ஓரணியில் இணைத்துள்ளார். அதனால், எங்களை மிரட்ட வேண்டிய அவசியம் பா.ஜ.,வுக்கு இல்லை. தி.மு.க., தான், வெளியே ஒன்று பேசி, உள்ளே காலை பிடிக்கும்; இரட்டை விளையாட்டை எப்போதுமே ஆடிக்கொண்டு இருக்கும்.
- தினகரன், பொதுச்செயலர், அ.ம.மு.க.,
Advertisement

வாசகர்கள் கருத்துகள்