Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ்

Advertisement


காங்கிரசுக்கு எதிராக பேசும் கூட்டணி கட்சிகள்: பின்னணியில் இருந்து இயக்கும் தி.மு.க.,

காங்கிரசுக்கு எதிராக பேசும் கூட்டணி கட்சிகள்: பின்னணியில் இருந்து இயக்கும் தி.மு.க.,

தொகுதி பங்கீடு பேச்சு நடத்துவதில் அவசரம் காட்டும் தமிழக காங்கிரஸ் கட்சிக்கு, கூட்டணி கட்சிகள் வாயிலாக தி.மு.க., நெருக்கடி கொடுத்து வருவதால், காங்கிரசார் அதிருப்தி அடைந்துள்ளனர்.

தமிழக காங்கிரஸ் சார்பில் ஐவர் குழு அமைக்கப்பட்டது. அது, தி.மு.க.,விடம் தொகுதி பங்கீடு குறித்து பேச திட்டமிடப்பட்டது. ஆட்சியில் பங்கு, 41 தொகுதிகள் என, காங்கிரசார் பொதுவெளியில் சொல்லும் நிபந்தனைகளை கேட்டு, தி.மு.க., கடும் கோபம் அடைந்துள்ளது. அதனால், காங்கிரஸ் கட்சியுடன் எந்த பேச்சுக்கும் முன்வராமல், மவுனம் சாதித்து வருகிறது.

இதற்கிடையில், எப்போதும் இல்லாத வகையில், இந்த தேர்தலில் காங்கிரஸ் தலைமை, கூட்டணி விஷயத்தில் திடீர் நெருக்கடி கொடுப்பதை முறியடிக்க, தி.மு.க., திட்டமிட்டது. அதன்படி, கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், காங்கிரசுக்கு பதிலடி தரும் நடவடிக்கையை கையில் எடுத்துள்ளது.
சமீபத்தில் தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை அளித்த பேட்டியில், 'தி.மு.க., கூட்டணிக்குள் ராமதாஸ் தலைமையிலான பா.ம.க.,வை சேர்க்க, ராமதாஸ்,- திருமாவளவன் இருவரும் பேசினால் போதும்; வி.சி., நிலைப்பாடு நிச்சயம் மாறும்' என்றார்.

அவரது கருத்துக்கு, வி.சி., - எம்.எல்.ஏ., எஸ்.எஸ்.பாலாஜி எதிர்ப்பு தெரிவித்து வெளியிட்ட அறிக்கையில், 'கூட்டணியில் யார் யார் இடம் பெறுவர் என்பதை தி.மு.க., முடிவெடுக்கும். ' அதே நேரம், ஜாதியவாத, மதவாத சக்திகள் இருக்கும் இடத்தில் இருக்க மாட்டோம் எனும் நிலைப்பாட்டை, வி.சி., மாற்றிக் கொள்ளும் என்கிற தோற்றத்தை திணிப்பது நாகரிகமற்ற அரசியல் அணுகுமுறை' என கூறியிருந்தார்.

செல்வப்பெருந்தகை கருத்துக்கு, வி.சி., துணை பொதுச்செயலர் வன்னியரசும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 'எங்கள் முடிவில் தலையிடுவது, நல்ல அரசியல் பண்பாக இல்லை' என்றார். இந்த விவகாரத்தில், தி.மு.க., எந்த கருத்தும் சொல்லாமல், காங்கிரசுக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் சீறுவதை ரசித்தது.
அதன் தொடர்ச்சியாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் சண்முகம் அளித்த பேட்டியில், 'வழக்கமாக கூட்டணிக்கு தலைமை வகிக்கக்கூடிய கட்சி தான் முதலில் பேச்சு நடத்த குழு அமைக்க வேண்டும். இந்த முறை தலைகீழாக நடக்கிறது. காங்., முதலில் குழு அமைத்துள்ளது' என்றார்.

இதே போலவே, இந்திய கம்யூ., கட்சியின் வீரபாண்டியனும், தி.மு.க., தரப்புக்கு ஆதரவாக சில தகவல்களை சொல்லி உள்ளார்.

தொகுதி பங்கீடு பேச்சு விவகாரத்தில், காங்கிரஸ் கட்சி தலைகீழாக செயல்படுகிறது என சண்முகம் விமர்சித்திருப்பது, காங்கிரசாருக்கு அதிருப்தியை அளித்துள்ளது.
இது குறித்து, தமிழக காங்கிரஸ் மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், 'கூட்டணி கட்சிகளை ஏவிவிட்டு, காங்கிரசை விமர்சிக்க வைக்கும் தி.மு.க.,வின் செயல் அப்பட்டமாக தெரிகிறது. தி.மு.க.,வுக்காக எங்களை விமர்சித்தாலும், நாங்களும் கூட்டணி கட்சி தான் என்பதை அவர்கள் உணரவில்லை' என்றார்.
- நமது நிருபர் -

Advertisement

பிப் 12, 2026 06:24 pm

இருப்பது கர்நாடக தெலங்கானாவில் மட்டும். கங்கணம் கட்டிக்கொண்டு எல்லா மாநிலங்களிலும் காங்கிரசை குழிதோண்டி புதைக்காமல் விடமாட்டார். கர்நாடக ஊசலாடிக்கொண்டிருக்கிறது. எந்நேரமும் DKS விலகலாம். இத்தனை ஆண்டுகாலம் திமுகவின் முந்தானையில் ஒழிந்து கொண்டு MP MLA பதவி பெற்றுவிடுகின்றனர். காங்கிரஸ் மிஷனரி கட்சியுடன் சேர்ந்து ஆட்சியை பிடித்துவிடலாம் என்று கனவு காண்கிறது. அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதைதான் ஆகும்.

Reply Rate this
பிப் 12, 2026 03:16 pm

ஆட்சியில் பங்கு என்று காங்கிரஸ் சொல்லும் துணிச்சல் ஏன் பாஜகவிடம் இல்லை கை உயர்ந்துள்ளது தாமரை தாழ்ந்து உள்ளது என்று மக்கள் மத்தியில் பேசிக்கொள்கிறார்கள்.

Reply Rate this
எப்படியும் விட்டெரியர வருக்கிய சாப்பிட போராங்க காங்கிரஸ்
பிப் 12, 2026 05:53 pm
Rate this
அப்படியா... அப்படியென்றால் கான் கிராஸ் கட்சியிடம் சொல்லுங்கள்.... 234 தொகுதியில் தனித்து போட்டியிட சொல்லுங்கள்.... அடுத்து உங்கள் ஆட்சி தான்..... வாங்கும் ஓட்டு.... மானம்... மரியாதை எல்லாம் போய் விடும்...பப்பு டப்பா டான்ஸ் ஆடி விடும்.
பிப் 12, 2026 06:10 pm
Rate this
பிப் 12, 2026 03:15 pm

என்ன செய்தாலும் கடைசியில் திமுக ஒரு 25 இடங்களைப் பிச்சையிடும்.வழக்கம் போல பொறுக்கிக் கொண்டு ஓட வேண்டியது தானே? ஏன் இந்த உதவாத சர்ச்சை?

Reply Rate this
பிப் 12, 2026 02:49 pm

திமுக கட்சியானது, பாஜகவுடன் 2029இல் கூட்டணி வைக்க முயற்சிக்கிறது.
அதன் முதல் படியாக, 2026இல் காங்கிரெஸ்ஸை கழற்றி விடுகிறது.

Reply Rate this
பிப் 12, 2026 02:23 pm

எல்லாத்துக்கும் சேத்துதான் கூலி பேசியிருக்கிறது.

Reply Rate this
பிப் 12, 2026 12:30 pm

பின்னால் இருந்து இயக்கி நாசம் விளைவிப்பதில் அதிமுகவினர் மிகவும் திறமையானவர்கள்.

Reply Rate this
AZHUKKALAYAM ADAPU EDUTHU 200 ROOVAA COOLIE VAANGUM BALAJI LANDU PIDICHUTTARU.ORU OSI QUARTER PARCEL FROM AZHUKKALAYAM BE HAPPY
பிப் 12, 2026 05:20 pm
Rate this
அவர்களை ஏன் கூறுகிறீர்கள்... உங்களுக்கு... நீங்களே குழி பறிக்கும் வேலையை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.
பிப் 12, 2026 06:12 pm
Rate this
பிப் 12, 2026 11:34 am

காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் கடந்த அரை நூற்றாண்டு காலமாக, கூட்டணி கட்சிகளுக்கு பல்லாக்கு தூக்கியே பழக்கப்பட்டு விட்டதால், திமுக கொடுக்கும் இடங்களை வாங்கி கொண்டு, கையை கட்டிக்கொண்டு வாய் பொத்தி நின்று, அடிமைச் சேவகம் பார்க்கும் என்பதில் ஐயமில்லை.

Reply Rate this
பிப் 12, 2026 09:56 am

நாரதர் கலகம் செய்வதில் திராவிட மாடல் கில்லாடி. தான் வாழ அடுத்தவனை கெடுக்க எந்த லெவெலுக்கும் போவார்கள். காங்கிரஸ் உஷார்.

Reply Rate this
பிப் 12, 2026 09:41 am

அவனும் விடமாட்டான் நீயும் போகமாட்டே. இந்த 10 வருஷ கண்ணாமூச்சி விளையாட்டை பார்த்து எங்களுக்கும் பழகிவிட்டது. ஒரே வார்த்தை : இனம் இனதோடு மட்டுமே சேரும்

Reply Rate this

இதற்கெல்லாம் வாய்ப்பு இல்லை

Reply Rate this