13 அமைச்சர் தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிய இபிஎஸ்!
சென்னை: தொகுதி பங்கீட்டில், திமுக அமைச்சர்களின் தொகுதிகளை, கூட்டணி கட்சிகளுக்கு, அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இபிஎஸ் ஒதுக்கி உள்ளார். அமைச்சர் சிவசங்கரின் குன்னம் தொகுதி, ஐ.ஜே.கே.,வுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. அமைச்சர்கள் சக்கரபாணியின் ஒட்டன்சத்திரம், முத்துசாமியின் ஈரோடு மேற்கு, காந்தியின் ராணிப்பேட்டை ஆகிய தொகுதிகள் த.மா.கா.,வுக்கு தரப்பட்டு உள்ளது.
அமைச்சர்கள் சுப்பிரமணியனின் சைதாப்பேட்டை, டி.ஆர்.பி.ராஜாவின் மன்னார்குடி ஆகியவை அ.ம.மு.க.,வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
மேலும், பெரியகருப்பனின் திருப்பத்துார், அனிதா ராதாகிருஷ்ணனின் திருச்செந்துார், மனோ தங்கராஜின் பத்மநாபபுரம், நாசரின் ஆவடி, எ.வ. வேலுவின் திருவண்ணாமலை என ஐந்து அமைச்சர்களின் தொகுதிகளும், சபாநாயகர் அப்பாவுவின் ராதாபுரம் தொகுதியும் பா.ஜ.,வுக்கு தரப்பட்டுள்ளது.
Advertisement
சைதாப்பேட்டை இந்த முறை சாருக்கு கிடைப்பது சந்தேகம்தான். அநேகமாக பிரியாவுக்கு கிடைக்க வாய்ப்புகள் அதிகம்

கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் அதிக அளவில் வெற்றி பெற்றால் ஆட்சியில் பங்கு கேட்பார்கள். அடுத்த தேர்தலில் அதிக சீட் கேட்பார்கள். முன் எச்சரிக்கை ?