/ செய்திகள் /  விஜயை பார்த்து தான் தி.மு.க.,வை அண்ணாதுரை ஆரம்பித்தார்: உதயநிதி கிண்டல்

 விஜயை பார்த்து தான் தி.மு.க.,வை அண்ணாதுரை ஆரம்பித்தார்: உதயநிதி கிண்டல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: 'மகளிர் உரிமைத்தொகை 5,000 ரூபாயை, தி.மு.க., அரசு கொடுத்தது என்னால் தான்' என த.வெ.க., தலைவர் விஜய் பேசியதை, துணை முதல்வர் உதயநிதி கிண்டல் அடித்துள்ளார். மதுரையில், தி.மு.க., இளைஞரணி மாநில ஒருங்கிணைப்பாளர் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற, துணை முதல்வர் உதயநிதி அளித்த பேட்டி: மகளிருக்கு உரிமைத்தொகை 5,000 ரூபாய் வழங்கியதால், அவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இது தேர்தலுக்காக கொடுக்கவில்லை. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு வரப்போவது குறித்து பலருக்கு தெரியவில்லை. மத்திய பிரதேசத்தில் ஒருமுறை இதேபோன்ற ஒரு திட்டத்தை வழக்கு தொடர்ந்து நிறுத்தினர். அதேபோல், தமிழகத்திலும் நிறுத்துவதற்கு, பா.ஜ.,வும், அ.தி.மு.க.,வும் முயற்சி செய்தன. இதை உணர்ந்தே, முன்னேற்பாடாக முதல்வர் ஸ்டாலின் வழங்கியுள்ளார். சேலத்தில் விஜய் கூட்டத்தில், ஒருவர் இறந்தது குறித்து, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் தான் கேட்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதையடுத்து, உதயநிதியிடம், 'தன்னால்தான் 5,000 ரூபாயை தி.மு.க., அரசு வழங்கியதாக, த.வெ.க., தலைவர் விஜய் கூறுகிறாரே' என கேள்வி எழுப்பியதற்கு, 'அண்ணாதுரையே, தன்னை பார்த்து தான் தி.மு.க.,வை ஆரம்பித்தார் என்று கூட விஜய் சொன்னாலும் சொல்வார்' என கிண்டலாக பதிலளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

Venugopal, S
பிப் 15, 2026 18:58

அல்ல. ராஜாஜி யி‌ன் தயவில் ஆரிய ஆதரவுடன் கட்சி தொடங்கி அமைச்சர் ஆனார். அதுவும் சட்ட மேலவை மூலம்


கூத்தாடி வாக்கியம்
பிப் 15, 2026 18:38

ஒரே குடும்பம் ஆட்சி பண்ணும் ன்கர விசயம் தெரிஞ்சி இருந்தால் திமுக கட்சியை அன்னா ஆரம்பித்தே இருக்க மாட்டார்கள்


ஆகுயர்த்தோன்
பிப் 15, 2026 13:46

கொஞ்சம் பொறுங்கள் ஜோசப் தானேதான் அண்ணா என்று இனி பதற்றத்தில் பேசுவார் பாருங்கள்.


ஆகுயர்த்தோன்
பிப் 15, 2026 13:35

41 பேர் செத்தார்கள் என்று ஜோசப் இடம் கேட்டபோது ஏன் மகாமகம் குளியல் ஜெயா சசி அப்ப 100 பேர் இறந்தார்களே அப்போ கேட்டீர்களா என்கிறான்


kulanthai kannan
பிப் 15, 2026 13:22

நேற்று நடைபெற்ற அரிசி திரைப்பட விழாவுக்குச் சென்றிருந்தேன். முழுக்க முழக்க தேச விரோத, அர்பன் நக்சல்கள் கூட்டம்.


bharathi
பிப் 15, 2026 12:59

that may be a sarcasm but your father told that he started loot from Annadurai where he learnt how to do so


R.MURALIKRISHNAN
பிப் 15, 2026 12:22

கவுன்சிலர் பதவிக்கு கூட லாய்கில்லாத நீ சொல்வதை கேட்க வேண்டிய தலையெழுத்து தமிழர்களுக்கு இருந்தால் மாற்ற முடியுமா என்றால் மாற்ற முடியும். வரும் தேர்தலில் அமர்த்துவோம் ஒரு தமிழர் முதல்வரை, அகற்றுவோம் வாய்க்கில்லாத கயவர்களை.


Rathna
பிப் 15, 2026 12:15

புதிய மனிதர்கள் அரசியலுக்கு வருவது நாட்டிற்கு நல்லது. அது வட்டத்தில் தொடங்கி, சிற்றரசர்கள், மாவட்ட கலக்க்ஷன் ஜமீன்கள், மற்றும் மாநில அளவு பரம்பரை கூட்டு கொள்ளை மாளிகைகளின் அஸ்திவாரத்தை அசைத்தால் நாட்டிற்கும், பணம் ஒருவரிடம் மட்டும் சேராமல் இருப்பதற்கும் நல்லது.


SIVA
பிப் 15, 2026 12:02

மக்குகள் நல்லது கெட்டது எதுவாக இருந்தாலும் ஒரு வாரத்தில் மறந்து விடுவார்கள், காமராஜரை மறந்த மக்குகள், எம்ஜிஆர் அவர்கள் இருந்த வரை அவரை மக்குகள் மறக்கவில்லை காரணம் தரமான ரேஷன் பொருட்கள், பள்ளிகளில் தரமான சாப்பாடு சட்டம் ஒழுங்கு இவை முக்கிய காரணம், அம்மா அவர்கள் இரண்டாவது முறை ஆட்சிக்கு வர முக்கிய காரணம் அம்மா உணவகம், விலையில்லா ஆடு மாடுகள் திட்டம் , சட்டம் ஒழுங்கு, இவை தான் இவை எல்லாம் மக்குகள் தினமும் பார்க்கும் விஷயங்கள் , இரண்டு லட்சம் தமிழ் குடும்பங்களை கொன்றவர்களையே மறந்த மக்குகள் , கரூர் வழக்கு விசாரணையை சுத்தமாக மறந்து விட்டார்கள் இந்த 3000 5000 ரூபாயை ஒரு வாரத்தில் மறந்து விடுவார்கள் , நான் மக்குகள் என்று சொல்வதின் அர்த்தம் மக்குகளுக்கு புரிந்தால் சரி ....


V Venkatachalam, Chennai-87
பிப் 15, 2026 11:52

கள்ள பணம் கையில் இருக்கும் திமிர் தான் இவனை இப்படி பேச வக்குது. கள்ள பணத்தை பிடுங்கி எறிந்து விட்டு சராசரி மனுஷனா ரோட்டில் விட்டு ஓட ஓட விரட்டி அடித்தால் நக்கல் நையாண்டி எல்லாம் எங்க போகும்னே தெரியாது. அது வரை இந்த அக்கப்போரை கேட்டுத் தொலைக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம்