/ செய்திகள் / திமுக தர முன்வந்துள்ள 25 தொகுதிகளை ஏற்றுக் கொள்ள முடியவில்லை; கிரிஷ் சோடங்கர்

திமுக தர முன்வந்துள்ள 25 தொகுதிகளை ஏற்றுக் கொள்ள முடியவில்லை; கிரிஷ் சோடங்கர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'திமுக அளிக்க முன்வந்துள்ள 25 தொகுதிகள் ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல' என்று காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் கூறி உள்ளார். திமுக கூட்டணியில் பிப்.22ம் தேதி முதல் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் தொடங்கி உள்ளன. அதனைத் தொடர்ந்து கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிகள் ஒதுக்கீடு பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் வெளியாகி வருகின்றன.ஆட்சியில் பங்கு, அதிக தொகுதிகள் என்று மல்லுக்கட்டும் காங்கிரஸ், திமுகவுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைகளை தொடங்கியது. காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையில் 5 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு பேச்சுவார்த்தை நடத்தியது.இந் நிலையில், புதுடில்லியில் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி; எங்கள் குழுவினரும், திமுகவின் பேச்சுவார்த்தை குழுவினரும் நேற்று 1 மணி நேரம் விவாதித்தனர். நாங்கள் சமர்ப்பித்த விருப்பப் பட்டியலை திமுக ஏற்றுக்கொள்ளும் என்று நம்புகிறோம். தற்போது, ​​எங்களின் கவனம் எல்லாம் சட்டமன்றத் தேர்தலை நோக்கி உள்ளது. சட்டமன்றத்தில் போதிய எண்ணிக்கையில் இடம் கிடைக்கும் என்று நம்புகிறோம். அவர்கள் (திமுக) முடிவு செய்த 25 தொகுதிகளை எங்களுக்கு அளிக்க முன் வந்தனர். அதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எங்களின் விருப்பம் என்ன என்பதை அவர்களிடம் தந்துள்ளோம்.தவெக ஒரு புதிய கட்சி. அவர்களை குறைத்து மதிப்பிட முடியாது. இளைஞர்களின் ஈர்ப்பு அந்த கட்சிக்கு இருக்கிறது. மேலும் அவர்கள் எங்கள் பலத்தையும், ராகுல் பலத்தையும் அறிந்தவர்கள் என்றார். அவரிடம் தவெகவுடன் கூட்டணி என்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.அதற்கு பதிலளித்த கிரிஷ் சோடங்கர், இப்போது திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இந்த தேர்தலில் எங்களின் விருப்பம் என்ன என்பதை அவர்களிடம் நாங்கள் வழங்கி இருக்கிறோம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

SIVA
மார் 02, 2026 08:38

2016 திமுக கூட்டணியில் தேமுதிக பழம் நழுவி பாலில் விழ வேண்டியது கூட்டணி ஆட்சிக்கு ஒப்பு கொள்ளாததால் மக்கள் நல கூட்டணிக்கு சென்றது , 2026 அதே கூட்டணி ஆட்சி பிரச்னை என்ன நடக்கிறது என்று வேடிக்கை பார்க்கலாம் .....


ராமகிருஷ்ணன்
மார் 02, 2026 04:17

காங்கிரஸ்காரர்கள் தோற்க்கும் இடங்களை தந்து திமுக பழி வாங்கி விடுவார்கள். தேர்தலில் உள்ளடி வேலைகள் செய்து நிச்சயம் தோற்க்க வைப்பார்கள் கொடுத்ததை வாங்கிட்டு போங்கடா


Ms Mahadevan Mahadevan
மார் 01, 2026 20:59

காங்கிரஸ் தனித்து போட்டி இட்டு தன் கொள்ளகைகளை மது வவிலக்கு என்று கூறி வாக்கு சதா விதத்தை அதிகஸ்ரீது கொண்டல் அடுத்த முறை வெற்றி நிச்சயம்


Barakat Ali
மார் 01, 2026 20:10

அப்ப டிவிகே கூட பயணிக்கலாமே ????


SULLAN
மார் 01, 2026 20:10

விசய் கட்சி பேர சொல்லியா பேரம் பேசுறீங்க?? சோடாங்கர் உங்க ரீலு அருந்து போச்சு?? கொடுக்குறத வாங்கிகிட்டு போர்றதுதான் உங்களுக்கு மரியாதை??


vivek
மார் 01, 2026 21:45

சுள்ளான் மாதிரி யாரும் அடிமை இல்லிங்கோ


duruvasar
மார் 01, 2026 19:49

என்னடி இப்படி இழுத்துகிட்டே இருக்குது என என் மவன் என்ற படத்தில் ராணி சோமநாதன் என்ற பழம் பெரு நடிகை ஒரு வசனம் பேசுவார். அந்த வசனம்தான் நினைவிக்கு வருகிறது


ஆரூர் ரங்
மார் 01, 2026 19:49

இதுவாவது கிடைத்ததற்கு மகிழ்ச்சியடையவும். 20 க்கு மேல் நான் எதிர்பார்க்கவில்லை. ரொம்ப பிகு பண்ணி வற்புறுத்தினா திர்ஷா கட்சி கூட்டணிக்கு போங்கன்னு விரட்டிவிடுவாங்க. உள்ளதும் போகும்.


iyer folsom
மார் 01, 2026 19:26

சுய மரியாதை வேண்டும் காங்கிரஸ் வேண்டாம் இந்த உறவு.


உண்மை கசக்கும்
மார் 01, 2026 18:53

அடுத்த செய்தி. செல்வபெருந்தகை திருடர்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார்


duruvasar
மார் 01, 2026 19:51

நடக்காது. அதற்க்கு எதிர்பாராத பெரும்தொகையை திமுக கொடுக்கவேண்டியிருக்கும். முதலில் சேரும் வாய்ப்பு திருமாவுக்குத்தான் அதிகம்.


சுந்தரம் விஸ்வநாதன்
மார் 01, 2026 20:04

மிகப்பழைய செய்தி


Santhakumar Srinivasalu
மார் 01, 2026 18:39

காங். இரட்டை குதிரையில் சவாரி செய்ய நினைக்கிறு!


V Venkatachalam, Chennai-87
மார் 01, 2026 19:43

சரிதான். திருட்டு தீயமுக 18 குதிரைகளில் சவாரி செய்யுது. இரட்டை குதிரை ஒண்ணுமே இல்லை. இதெல்லாம் ஜுஜுபி.