கவலைப்படாதே சகோதரா... களத்தில் 'மாஜி' உடன்பிறப்பு

திண்டிவனத்தைச் சேர்ந்த அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சண்முகத்தின் அண்ணனும், அ.தி.மு.க.,வின் அதிகாரப்பூர்வ 'டிவி'யின் நிர்வாக இயக்குனராக இருப்பவர் ராதாகிருஷ்ணன். சண்முகத்தின் அரசியல் முன்னேற்றத்திற்கு பக்கபலமாக இருப்பவர்.

தற்போது லோக்சபா தேர்தலை முன்னிட்டு, களத்தில் நேரடியாக இறங்கி விட்டார். விழுப்புரம் தொகுதியில் அ.தி.மு.க., நிற்பது உறுதியாகி விட்டதால்,கட்சியின் கிளைச் செயலர்கள், வார்டு செயலர்கள்,தொகுதி பொறுப்பாளர்கள் உள்ளிட்டோருடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

பத்திரிகையாளர்கள் அழைப்பை தவிர்த்து கட்சி நிர்வாகிகளுடன் தனியாக ஆலோசனை நடத்தும் அவர், கிளைச் செயலர்கள் உள்ளிட்டோருக்கு, சுவர் விளம்பரம், பிரசாரம் எனப் பல செலவுகளுக்காக தனியாக ஒரு தொகை கொடுத்து குஷிப்படுத்தியுள்ளார்.

எப்படியும் இம்முறை விழுப்புரத்தில் அ.தி.மு.க.,வுக்கு எதிராக போட்டியிடும் வி.சி.,களை கட்டாயம் தோற்கடிப்பேன் என்று சொல்லி அவர் களம் இறங்கி இருப்பது,

தி.மு.க., கூட்டணியில் விழுப்புரத்தில் போட்டியிடும் வி.சி.,யினரை கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்