மன்னிப்பு கோரிய 'மாஜி' அமைச்சர்

கரூர் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட, கிருஷ்ணராயபுரம் சட்டசபை தொகுதி, வீரராக்கியம் பகுதியில் நேற்று காலை, 6:30 மணிக்கு அ.தி.மு.க., வேட்பாளர் தங்கவேல் பிரசாரம் செய்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இரண்டரை மணி நேரம் தாமதமாக, 'மாஜி' அமைச்சர் விஜயபாஸ்கர், கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் வந்தார். அவருடன் வேட்பாளர் தங்கவேல் வரவில்லை.

அப்போது விஜயபாஸ்கர் கூறுகையில், ''வேட்பாளர் தங்கவேல், வேறு ஒரு முக்கிய வேலையாக திருச்சி சென்றுள்ளார். மீண்டும் அவரை அழைத்து வருகிறேன். தாமதமாக வந்ததற்கு மன்னிக்கவும். அ.தி.மு.க., ஆட்சியின் திட்டங்களான தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு லேப்டாப், பசு மாடு, கோழி வழங்குதல் உள்ளிட்ட பல திட்டங்கள் மீண்டும் வர, அ.தி.மு.க.,வுக்கு ஓட்டு போட வேண்டும்,” என்றார்.

வேட்பாளருக்கு ஆரத்தி எடுக்க வந்து, ஏமாற்றம் அடைந்த 50க்கும் மேற்பட்ட பெண்களுக்கு தலா, 50 ரூபாயை அ.தி.மு.க.,வினர் வழங்கினர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்