Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் கருத்துக் கணிப்பு முடிவுகள்

Advertisement


தொகுதி பங்கீடு; திமுக- மார்க்சிஸ்ட் இடையே நீடிக்கும் இழுபறி

தொகுதி பங்கீடு; திமுக- மார்க்சிஸ்ட் இடையே நீடிக்கும் இழுபறி
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை: கூடுதல் தொகுதியை பெறுவதில் நாங்கள் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்வோம். கடந்த முறையை விட அதிக தொகுதிகளில் போட்டியிடுவதால் உறுதியாக இருக்கிறோம் என மார்க்சிஸ்ட் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். திமுக- மார்க்சிஸ்ட் இடையே தொகுதி பங்கீடு பேச்சு தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொகுதி பங்கீடு தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் திமுக பேச்சு நடந்தது. பிறகு நிருபர்களிடம் மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் கூறியதாவது:
தமிழகத்திற்கு போதுமான அவகாசம் உள்ளது. அடுத்து ஓரிரு நாட்களில் தொகுதி உடன்பாடு தொடர்பாக அனைத்தும் நிறைவு பெறும் என்று கருதுகிறோம். கடந்த முறையை விட குறைவான தொகுதியை பெற்றுக்கொள்ளுமாறு திமுக குழுவினர் கேட்டு கொண்டனர். கடந்த காலத்தில் போட்டியிட்ட தொகுதிகளை விட கூடுதல் தொகுதியில் போட்டியிட வேண்டும்; அதற்கு தகுந்தபடி அதிக தொகுதிகளை தர வேண்டும் என்று நாங்கள் சொல்லி இருக்கிறோம்.

கட்சி தலைவரிடம் பேச்சுக்கு பிறகு கூறுவதாக கூறியுள்ளனர். நிறைய கட்சிகள் இருக்கும் போது இந்த மாதிரியான நிலை தவிர்க்க முடியாது, அதனை நாங்கள் உணர்ந்து இருக்கிறோம். மார்க்சிஸ்ட் கட்சிக்கான கூடுதல் தொகுதியை பெறுவதில் நாங்கள் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்வோம். இவ்வாறு சண்முகம் கூறினார்.
காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் தொகுதி வழங்கியதில் எங்களுக்கு எந்த ஆட்சேபமும் இல்லை என்றும் சண்முகம் தெரிவித்தார்.

Advertisement

மார் 17, 2026 04:37 pm

கொடுக்கிற ரெண்டு சீட்டை வாங்கிக்கொண்டு ஓடி போய்டு இல்லை என்றால் பிச்சை எடுக்கணும்

Reply Rate this
மார் 17, 2026 03:54 pm

அடுத்தவன் காலை... பிழைப்பவன் கம்யூனிஸ்ட்,
இந்தியாவில் இருந்து ஒழிக்கப்பட வேண்டிய கட்சி காங்கிரஸ், பக்கம் 21 க்கு பிறந்தவன் திமுககாரன்.
இந்த மூன்று உண்மைகளை சொன்னதற்காகவே நாம் ஈ.வெ.ராமசாமியை பாராட்டலாம்.

Reply Rate this
மார் 17, 2026 03:40 pm

தோழராய் இருந்த நீங்க இப்போ பூஷுவா க ஆகிய காரணம் இரண்டு ஊழல் வாத்திகளை கண்டிக்க மறந்தது, அவிகளோடு உறவு இது தான் உங்க அழிவு ஆரம்பம் ஆகிவிட்டது..... ஒன்னுக்கும் ரெண்டுக்கும் கெஞ்சல் வெட்கம்....234 லில் நின்று காட்டுங்கள்...

Reply Rate this
மார் 17, 2026 03:24 pm

நீங்க தான் பெரிய கட்சி ஆச்சே தெரும வை கூட்டிட்டு போய்
தனியா நில்லுங்க
ஆல் ஓவர் இந்தியா அவுட்
கூட்டணி இல்லையெனில் இங்கேயும் அவுட்
நோ டவுட்
கௌண்டமணி சொன்னமாதிரி 10 ரூபாய் சில்லறையை விசிறி விட்டால் எவனும் ஸ்டெடி யா நிக்கமாட்டானுக இதில் வீறாப்பு
கூட்டணி இல்லைனா ஆப்பு தான் ஓகேவா

Reply Rate this
மார் 17, 2026 02:57 pm

ஆம் இன்னமும் அதே 25 என்றால் அதனை கம்யூனிஸ்டுகள் ஏற்க மாட்டார்கள். விலைவாசி உயர்ந்துவிட்டது. ஆட்களும் மோப்பம் பிடித்துவிட்டார்கள் பங்கு பிரிக்கும்போது குறைச்சலாக இருந்தால் எப்படி ஏற்பார்கள். தொகுதியை சொல்லவில்லை. சென்றமுறை ஸ்டாலின் சொன்னதாலேயே தெரிந்தது 25 கோடி இந்த கம்யூனிஸ்டுகளுக்கு கொடுத்தது. அதையே இன்னும் உயர்த்தி 35 கோடி என்றால் ஒருவேளை உடனே ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்புள்ளது

Reply Rate this
மார் 17, 2026 02:53 pm

பிரேமலதாவுக்கு சீட் ஒதுக்கினால் தான் இந்த பேரம் முடியும். அதைவிட விஜய் NDA கூட்டணிக்குள் சென்றால் சீட்டு குறையும் அதனால்தான் குருமாவும், சண்முகமும் விஜய் பற்றி ஓலமிடுகிறார்கள்.

Reply Rate this
மார் 17, 2026 02:52 pm

மக்கள் பிரச்சனைக்காக அரசை எதிர்த்து போராடாமல், இந்து வெறுப்பை மட்டுமே காட்டிய உங்களுக்கு இந்த அவமானம் தேவையானது தான். தமிழகத்துல மட்டுமல்ல, இந்தியாவிலேயே கம்யூனிஸம் மண்ணாகி போன நிலையில் ஓரிரு இடங்களை திமுக கொடுக்கும் போது கும்பிடு போட்டு வாங்கிக்குங்கோ.

Reply Rate this
மார் 17, 2026 02:49 pm

பொட்டிய வாங்குனமா திரும்பி வந்தமான்னு இருக்கணும். நாம பெரிய மானஸ்தர்களும் கிடையாது, மகாராஜாக்களும் கிடையாது. இப்படி வாய் கொழுப்பினால கொடுப்பினையில்லாம போயிடுவோம் போலிருக்கு சாமி .

Reply Rate this
மார் 17, 2026 02:36 pm

தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு முதல்வர் வருவதற்கு என்ன சிக்கல் ? திருதராஷ்டிரன் நிலைமையில் இருக்கிறாரா ? அல்லது இரான் அதிபர் நிலமயிலா ?

Reply Rate this
மார் 17, 2026 02:27 pm

கம்யூனிஸ்ட் கட்சிக்கு என்ன வாக்கு சதவீதம் இருப்பதாக நினைக்கிறார்கள்? அவர்களின் கட்சி என்று பணத்திற்கு அடிமையாகி மக்கள் நலன் சார்பு நிலை இல்லாமல் இருக்க பழகிவிட்டார்களோ பிறகு என்ன வேண்டிக்கிடக்கு இவர்களுக்கு தலா 2 சீட்டு போதுமானது. கம்யூனிஸ்ட் கட்சிகளால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை. இருந்தும் ஒண்ணுதான் இல்லாமல் இருந்தாலும் ஒண்ணுதான் .

Reply Rate this