Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ்

Advertisement


 பன்னீர் மீதான வழக்குகள்: ரத்து உயர் நீதிமன்றம் உத்தரவு

 பன்னீர் மீதான வழக்குகள்: ரத்து உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு எதிரான தேர்தல் விதிமீறல் வழக்குகளை ரத்து செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2024 லோக்சபா தேர்தலில், ராமநாதபுரம் தொகுதியில், பா.ஜ., கூட்டணியில் சுயேச்சை வேட்பாளராக, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் போட்டியிட்டார்.

அப்போது, தேர்தல் விதிமுறைகளை மீறி அதிக வாகனங்களில் சென்று பிரசாரம் செய்தது, இரவு 10:00 மணிக்கு மேல் பட்டாசு வெடித்தது என பரமக்குடி, திருவாடானை, திருப்புல்லாணி, கீழக்கரை ஆகிய போலீஸ் நிலையங்களில், நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி, பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் விசாரணைக்கு வந்தன.

அப்போது, பன்னீர்செல்வம் தரப்பில், 'தேர்தல் விதிமுறைகள் தொடர்பாக, தகுதியான அதிகாரி புகார் அளிக்காமல், காவல் துறை அதிகாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில் மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒரு வழக்கில், காலதாமதமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. எனவே, நான்கு வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும்' என வாதிடப்பட்டது.

இதை ஏற்ற நீதிபதி, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு எதிரான, நான்கு தேர்தல் விதிமீறல் வழக்குகளையும் ரத்து செய்து உத்தரவிட்டார்.

Advertisement

மார் 06, 2026 12:20 pm

திரு.பன்னீர் அவர்கள் ஏன் இன்னமும் கண்ணீரை கைக்குட்டையால் துடைத்து கொண்டே இருக்கிறார் ?

Reply Rate this
மார் 06, 2026 10:28 am

அரசியல் எதிரிகளின் மேல் பொய் கேஸ் போட்டு மன உளச்சல் ஏற்படுத்தி பலம் குறைந்த போது தன் பக்கம் இழுத்து கேஸை வாபஸ் வாங்கி அவனை டம்மி பீஸாக்குவது ஒரு கேவலமான அரசியல். இதே நிலைமை வைகோ, ஸ்டாலின் அவர்கட்கும் வருங்காலத்தில் ஏற்படும். உரிமைத் தொகை வாங்கிய பெண்களும் திமுகவை சாய்க்கும் நிகழ்வும் நடந்தேறும். சத்யத்தை வெல்ல முடியுமா ?

Reply Rate this