தேர்தல் முன்னேற்பாடு; தேர்தல் கமிஷன் ஆய்வு
சென்னை: சட்டசபை தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து, தேர்தல் கமிஷன் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
தமிழக சட்டசபை தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
இதை முன்னிட்டு, தேர்தல் பணிகள் தொடர்பாக, மூத்த துணை தேர்தல் கமிஷனர் பானு பிரகாஷ் எத்துரு, துணை தேர்தல் கமிஷனர்கள் சஞ்சய் குமார், ஆஷிஷ் கோயல், ஊடகப் பிரிவு தலைமை இயக்குநர் சுப்ரா சக்சேனா ஆகியோர், தமிழகத்தில் பொதுத்தேர்தல் தயார்நிலை குறித்து கடந்த இரு தினங்களாக ஆய்வு மேற்கொண்டனர்.
தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், போலீஸ் அதிகாரிகள், மாவட்ட கலெக்டர்கள் மற்றும் அலுவலர்களுடன், தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசித்தனர்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள் (0)