Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் கருத்துக் கணிப்பு முடிவுகள்

Advertisement


 தி.மு.க., எங்களை ஏமாற்றி விட்டது: சத்துணவு ஓய்வூதியர்கள் காட்டம்

 தி.மு.க., எங்களை ஏமாற்றி விட்டது: சத்துணவு ஓய்வூதியர்கள் காட்டம்
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை: 'ஓய்வூதியம் உயர்த்தி வழங்குவது குறித்த அறிவிப்பில், தி.மு.க., அரசு எங்களை திட்டமிட்டு ஏமாற்றிவிட்டது' என, சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

'சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கான ஓய்வூதியம், 2,000 ரூபாயிலிருந்து 3,400 ரூபாயாகவும், பணிக்கொடை ஒரு லட்சம் ரூபாயில் இருந்து, 2 லட்சம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும்.

'ஈமச்சடங்கு செலவினமாக, 20,000 ரூபாய் வழங்கப்படும்' என, கடந்த ஜன.,24ம் தேதி முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

இதற்கான, அரசாணை, பிப்.,13ல் வெளியானது. இதனால், மார்ச் மாதம் முதல் உயர்த்தப்பட்ட ஓய்வூதியம் வழங்கப்படும் என, சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால், சமூக நலத்துறை சார்பில், அரசாணை, வழிகாட்டு நெறிமுறைகள் வெளியாகாததால், ஓய்வூதியம் உயர்வில் இழுபறி ஏற்பட்டது.

தற்போது, தேர்தல் அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், ஏற்கனவே உள்ள திட்டங்களுக்கு மட்டுமே, நிதி ஒதுக்க முடியும். புது திட்டங்களுக்கு, நிதி பெற முடியாது.

இதனால், ஓய்வூதியம் உயர்த்தப்படும் என தி.மு.க., அரசு, தங்களை நம்ப வைத்து ஏமாற்றி விட்டதாக, சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

இது குறித்து, தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூறியதாவது:

கடந்த பிப்.,13ம் தேதி வெளியான அரசாணையில், தேதி குறிப்பிடவில்லை. இதனால், மார்ச் மாதம் வழக்கம் போல், 2,000 ரூபாய் தான் ஓய்வூதியம் கிடைத்தது.

இது குறித்து, சமூக நலத்துறையில் கேட்ட போது, வழிகாட்டு நெறிமுறைகளை தயாரிப்பதாக கூறினர்.

தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், தேர்தல் முடியும் வரை, ஓய்வூதியம் உயர்த்தப்படுவது சாத்தியமற்றது. தி.மு.க., அரசு எங்களை திட்டமிட்டு ஏமாற்றிவிட்டது.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement

மார் 22, 2026 06:01 am

ஓரளவுக்கு படித்து, திராவிடர்களுக்கு பக்கவாட்டில் பணம் கொடுத்து வேலை வாங்கிய தமிழன் திராவிடர்களுக்கு என்றும் விசுவாசமாக இருப்பான். அதே போல இவர்கள் இல்லாவிட்டாலும் சாப்பாட்டுக்கு வழியில்லாதவர்களை பட்டியில் மாதக்கணக்கில் அடைத்து வைத்து சாப்பாடு, சுய தயாரிப்பு - வில்லை ஒட்டாத மது மற்றும் அதற்க்கு மேலாக தினப்படி கொடுத்து உபசரித்து ஓட்டுப்போடச் சொன்னால் தாராளமாக ஓட்டுப்போடும் தமிழன் இருக்கும்வரை திராவிடத்தை அசைக்க முடியாது.

Reply Rate this
மார் 22, 2026 05:46 am

உங்களை மட்டும்தானா?

Reply Rate this
மார் 22, 2026 05:32 am

இஸ்கான் போன்ற தொண்டு நிறுவனங்கள் செய்ய வேண்டிய வேலையை ஓர் அரசாங்கம் செய்வதே தேவையற்றது. பலரும் கொள்ளையடித்து ஊழல் மலிந்து சத்துணவு இன்று சொத்தையுணவு ஆகிடுச்சு.

Reply Rate this
மார் 22, 2026 04:07 am

மனம் இருந்தால் மக்களுக்கு நல்லது செய்ய மார்கம் உண்டு. இந்த திமுக ஆட்சியில் அனைவருக்கும் ஏமாற்றம் என்னும் ஒன்று மட்டுமே உண்டு.

Reply Rate this
பாஜக அதிமுக கூட்டணி ஆட்சி வந்தவுடன் தனியார் நிறுவனங்களிடம் இந்த திட்டத்தை கொடுத்து மேம்படுத்த வேண்டும் என்று மக்கள் சிலர் பேசுகிறார்கள்.
மார் 22, 2026 05:34 am
Rate this