/ செய்திகள் /  அரசு விழாவில் அமைச்சர் பிரசாரம்; ஈரோடு கலெக்டர் மழுப்பல்

 அரசு விழாவில் அமைச்சர் பிரசாரம்; ஈரோடு கலெக்டர் மழுப்பல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஈரோடு: ஈரோட்டில் அரசு விழாவில், அமைச்சர் முத்துசாமி, 'உதயசூரியன்' சின்னம் அச்சிட்ட பையில், அரிசி மற்றும் தட்டு வினியோகம் செய்தது, மக்களை மட்டுமின்றி, விழாவில் பங்கேற்ற அரசு அதிகாரிகளை அதிர்ச்சி அடைய வைத்தது. ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச ஸ்கூட்டர், பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. விழாவுக்கு கலெக்டர் கந்தசாமி முன்னிலை வகித்தார். அரசு விழாவில் வழங்கப்பட்ட ஸ்கூட்டர், தையல் மிஷினுடன், 'வாக்களிப்பீர் உதய சூரியனுக்கு; ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க.,' என அச்சிடப்பட்ட பையில், 5 கிலோ அரிசி, கருணாநிதி, ஸ்டாலின் படத்துடன் தட்டு ஆகியவற்றை அமைச்சர் முத்துசாமி வழங்கினார். முன்னதாக தி.மு.க., பிரசார வாகனத்தில் கொண்டு வரப்பட்ட இந்த பைகளை, பத்திரிகையாளர்கள் படம் எடுக்க சென்றதும், அமைச்சருடன் வந்த வாட்டசாட்டமான ஆசாமிகள், ஒருமையில் பேசி மிரட்டினர். கலெக்டர் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் முன்னிலையில், அரசு நிகழ்ச்சியில் அமைச்சர் ஓட்டு சேகரித்து, அரிசி வழங்கியது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. இந்நிகழ்வுகளின்போது அமைச்சரின் அருகிலேயே, கலெக்டர் கந்தசாமி நின்று கொண்டிருந்தார். அரசு நிகழ்ச்சியில், அமைச்சரின் செயல் குறித்து கேட்டதும், கலெக்டர் கந்தசாமி கூறியதாவது: தேர்தல் நடத்தை விதிமுறை தற்போது அமலில் இல்லை. விதிமுறை அமலில் இருந்தால், அமைச்சரை அப்படி செய்ய விடமாட்டோம். நானும், அரிசி பையை பார்த்தேன். அதில், தி.மு.க., விளம்பரம் இருந்தது. அந்த இடத்தில் எதையும் சொல்ல முடியவில்லை. இனி அதுபோல் நடக்காமல் பார்த்து கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Chinnamanibalan
பிப் 15, 2026 17:05

தற்போது உள்ள சூழலில், எந்த ஒரு அதிகாரியாக இருந்தாலும் அந்த இடத்தில் ஒன்றும் செய்ய இயலாது. சமீபத்தில் திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் நிகழ்வில், நீதிமன்றம் உத்தரவு வழங்கிய பின்னரும் கூட, அதை நிறைவேற்ற இயலாத நிலைக்கு தள்ளப்பட்ட அதிகாரிகளின் நிலைமையை நினைவில் கொள்ளவும்.


M S RAGHUNATHAN
பிப் 15, 2026 15:41

உடனே விழா மேடையில் இருந்து விலகி இருந்திருக்க வேண்டும். IAS மாண்பை சிதைத்து விட்டார். ஆனால் திராவிட அரசு இவருக்கு chief secretary பதவி கொடுத்தாலும் கொடுக்கும்.


உண்மை கசக்கும்
பிப் 15, 2026 14:31

என்ன ஐ ஏ எஸ் படிச்சீங்க,


S. Gopalakrishnan
பிப் 15, 2026 13:25

அந்த ‌இடத்தில் எதையும் சொல்ல முடியவில்லை. பின் எப்போது சொல்வாராம் ? மந்திரி வீட்டில் போய் சொல்வாரா ?


krishna
பிப் 15, 2026 12:00

IDHIDHAAN DRAVIDA MODEL.


xyzabc
பிப் 15, 2026 11:42

அதிகாரத்தை எப்படி misuse செய்வது?


duruvasar
பிப் 15, 2026 11:31

இதுவரை திராவிட மாடலுக்கு புது புது விளக்கங்கள் ஒவொவரு நாளும் கொடுக்கபடுகிறது. அதோடு அதிகார துஷ்ப்ரயோகம் என்பதையும் சேர்த்துக்கொள்ளவேண்டியதுதான்.