சென்னை: நடந்து முடிந்துள்ள சட்டசபை தேர்தல் புதிய தொடக்கமாகவும், தங்கள் கட்சியினருக்கு புதிய அனுபவமாகவும் இருப்பதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தின் 16வது சட்டசபை தேர்தலில் 72 சதவீத வாக்குப்பதிவு நிகழ்ந்திருக்கிறது. கொரோனா பெருந்தொற்று அச்சுறுத்தல் என்ற இக்கட்டான சூழலிலும் 72 சதவீத வாக்காளர்கள் தங்களது கடமையை ஆற்றியிருப்பது ஜனநாயகத்தின் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை காட்டுகிறது. இனிவரும் தேர்தல்களில் நம் பங்களிப்பு இன்னும் சிறப்பாக இருக்க வேண்டும் என்பது என் ஆசை. இந்த தேர்தலில் என்னோடு கைகோர்த்து களம் கண்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.தேர்தல் என்பது முடிவல்ல. மக்கள் பணியில் முடிவென்பதே கிடையாது. என்னைப் பொருத்தவரை இந்த தேர்தல் ஒரு புதிய தொடக்கம். எனது கட்சியினருக்கும் இது புதிய அனுபவம். நிறைய அனுபவங்களைக் கற்று முன்னகர்ந்திருக்கிறோம். 'மக்கள் அன்பை விட மகத்தான பலம் இல்லை' என்பது அதில் முதன்மையானது. தமிழகத்தை சீரமைப்போம் என்பது வெறும் தேர்தல் கோஷம் அல்ல. அது ஒரு கூட்டுக் கனவு. அதை நோக்கிய பாதையிலும் பயணத்திலும் சிறிதும் விலகல் இல்லை. மண்ணை, மொழியை, மக்களைக் காக்க இன்று போல் என்றும் களத்தில் நிற்போம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தேர்தல் எங்களுக்கு புதிய தொடக்கம், புதிய அனுபவம்: கமல் அறிக்கை
இவருக்கு இது புதிய அனுபவம் தானே அப்படி இருக்கையில், போட்டி கட்சி வேட்பாளரை, இவரை விட அரசியல் அனுபவம் மிக்க அரசியல் வாதி , அதிலும் அவர் ஒரு பெண்மணி என்பதையும் நினைவில் கொள்ளாமல் துக்கடா அரசியல் வாதி இகழ்ந்து பேசினாரே அப்போது மட்டும் , தான் பல ஆண்டுகள் அரசியலில் இருந்து தேர்தல் காலத்தில் பல வெற்றி தோல்விகளைக் கண்டு பழுத்த அனுபவம் அடைந்தவராக தன்னைத் தானே உயர்த்தி மதிப்பிட்டுக் கொண்டாரா ?
மக்கள் நீதி மய்யம் தனித்து இன்னமும் ரெண்டு தேர்தல்களில் போட்டி போட்டு ஸ்திரமாக நின்றாள் அதன் எதிர்காலம் பிரகாசம். மக்கள் வலுவான மாற்றத்தை எதிர் பார்க்கிறார்கள். இதை இவரும் திரு சீமான் அவர்களும் நன்கு உணர்ந்து உள்ளனர். MNM ம் சீமான் அவர்களை போல தனித்து அனைத்து தொகுதிகளிலும் போட்டி இட்டு நல்ல ஒரு அடித்தளத்தை போட வேண்டும். After ADMK vs DMK it will be MNM Vs Naam Thamizhar in TN என்கிற நிலையை இவர்கள் இருவருமே மக்கள் பணி ஆற்றி தங்களை மக்கள் மனதில் பதிய வைக்க வேண்டும். நேர்வழியில் பல ராஜதந்திரங்களை பிரயோகப் படுத்த வேண்டும். இவர்கள் இருவருமே PEOPLE CENTRIC PARTY என்பதை மாற்றி POLICY CENTRIC PARTY என்பதில் கவனம் வைக்க வேண்டும். இவர்களது காலத்திற்கு பிறகும் இவர்களது கட்சி நிலைத்து இருக்கும் என்கிற நிலையை உருவாக்க வேண்டும்.
இதேதான் பிஜேபி மற்றும் காங்கிரஸ்க்கும்.
வாரிசு குலத்தொழில் நிராகரிப்போம் - Lemuria,இந்தியா
07-ஏப்-2021 21:21 Report Abuse
Balasubramanian - Bangalore,இந்தியா
07-ஏப்-2021 19:22 Report Abuse
திராவிஷ கிருமி - ராமசாமிநாயக்கன்பாளையம் ,இந்தியா
07-ஏப்-2021 19:19 Report Abuse
Balasubramanian Ramanathan - vadakupatti,இந்தியா
07-ஏப்-2021 18:50 Report Abuse
07-ஏப்-2021 19:29Report Abuse
MURUGESAN - namakkal,இந்தியா
07-ஏப்-2021 18:02 Report Abuse
திராவிஷ கிருமி - ராமசாமிநாயக்கன்பாளையம் ,இந்தியா
07-ஏப்-2021 19:13Report Abuse
07-ஏப்-2021 17:56 Report Abuse
07-ஏப்-2021 17:41 Report Abuse
Rajasekaran - Chennai,இந்தியா
07-ஏப்-2021 17:36 Report Abuse

Anbuselvan - Bahrain,பஹ்ரைன்
07-ஏப்-2021 17:31 Report Abuse

07-ஏப்-2021 19:31Report Abuse
Raja - Trichy,இந்தியா
07-ஏப்-2021 17:16 Report Abuse
மேலும் 21 கருத்துக்கள்...