தொகுதிக்கு நல்லது செய்யணும்

மக்கள் பிரதிநிதிகளை நேரடியாகவும், சுலபமாகவும், சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும். எம்.எல்.ஏ.,வாக தேர்வாகும் நபர், தனது சொந்த நிதியில், தொகுதிக்கு நல்லது செய்ய வேண்டும். மக்கள் துயர் துடைக்க வேண்டும் என நினைப்பவருக்கே என் ஓட்டு. -
சுமதி, 35, குடும்ப தலைவி, விருதுநகர்.

பணம் வாங்குவது குற்றம்




பெட்ரோல், டீசல் உட்பட, அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. ஓட்டுக்கு பணம் வாங்குவதும், கொடுப்பதும் குற்றமாகும். மக்கள் சேவையே மகேசன் சேவை என நினைத்து, அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து தர முன்வரும் நல்லவருக்கே என் ஓட்டு.
டி.செந்தில்குமார், ௩௦, சுயதொழில், ராமநாதபுரம்.

கட்டப்பஞ்சாயத்து கூடாது



அடாவடி, கட்டப்பஞ்சாயத்து, எங்கும் நிகழாமல் தடுக்கும் அரசே தமிழகத்திற்கு தேவை.மத்திய, மாநில அரசுகள், தொழில் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் தருவதால், படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். அதனால், தற்போதைய அரசுக்கே என் ஆதரவு.
- கணேசமூர்த்தி, 38, தொழில்முனைவோர், மதுரை.

'நோட்டா'வுக்கே ஆதரவு



மாற்றம் வரும் என எதிர்பார்த்து, மாறி மாறி இரு திராவிட கட்சிகளுக்கும் ஓட்டு போட்டேன். தனிப்பட்ட முறையில், மக்களின் பொருளாதார நிலைமை மேம்படவில்லை. எனவே,யாருக்கும் ஆதரவு இல்லை என்பதை குறிப்பிடும், 'நோட்டா'வுக்கே என் ஓட்டு.
ஆர்.மணிகண்டன், 40, ஆட்டோ டிரைவர், சூலுார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)