ஓட்டு தரும் வந்தே பாரத் பா.ஜ., உறுதி

மோடி அரசின் வந்தே பாரத் ரயில் உள்ளிட்ட திட்டங்கள் மூலம் பா.ஜ.,வுக்கு மக்கள் ஓட்டளிப்பர் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர்அக்கட்சியினர்.

இதுகுறித்து, பா.ஜ.,வினர் கூறியதாவது:

ரயில்வேயை நவீனப்படுத்தி மோடி செய்துள்ள மாற்றங்களை கண்கூடாக பார்க்கும் மக்கள், இது மோடியின் வளர்ச்சி திட்டம் எனப் புரிந்து கொண்டுள்ளனர்.

கூடுதல் பிளாட்பாரம், அதன் நீளம் அதிகரிப்பு, எஸ்கலேட்டர் வசதி, சுத்தமான குடிநீர், சுகாதாரமான உணவகங்கள், ரயில் விபரங்களை தெரிந்து கொள்ளும் டிஜிட்டல் பெயர் பலகைகள், ஸ்டேஷன்களில் மருந்தகங்கள், மருத்துவ வசதி, 'ஏசி' ஓய்வறை என ரயில்வே ஸ்டேஷன்கள் மிளிர்கின்றன.

வந்தே பாரத், தேஜஸ் என புதிய, புதிய நவீன வசதியுடன் ரயில்கள் ஓடுகின்றன.

வந்தே பாரத் ரயில்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது. புதிய ரயில் வசதிகளை மோடி ஏற்படுத்தி தந்திருக்கிறார் என்று மக்களிடம் மத்திய அரசின் சாதனைகளை கூறி ஓட்டு வாங்கலாம்.

இவ்வாறு அக்கட்சியினர் கூறினர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்