திமுக ஆட்சியில் ஊழல்...: வெளியானது தினமலர் - சாணக்யா கருத்துக்கணிப்பு
சென்னை: விஜய் அரசியல், திமுக அரசில் ஊழல் உள்ளிட்டவை குறித்து தினமலர் மற்றும் சாணக்யா இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பு முடிவு வெளியாகி உள்ளது.
தமிழகம் முழுதும் 4,500 பேரிடம் எடுத்த கருத்துக்கணிப்பில் போலிகள், தகவல் பற்றாக்குறை நீங்கலாக 3,821 பேரிடம் இருந்து கிடைத்த தகவல்படி சட்டசபையில் 234 தொகுதிகளிலும் மக்களின் மன நிலை இந்த ஜனவரியில் எப்படி உள்ளது என்பதற்கான சில பதில்கள் நேற்று( ஜன.,27) வெளியிடப்பட்டன. இன்று இன்னும் சில பதில்கள் இதோ:
1. வாக்குறுதிகளை நிறைவேற்றியதா திமுக அரசு?
நூறு சதவீதம் - 16%
ஒன்றுமே செய்யல- 32%
ஒரளவு -52 %
2. திமுக ஆட்சியில் ஊழல்...?
ஊழலே இல்லை - 16%
வழக்கம் போல... - 33%
அதிகரித்துள்ளது - 51%
3.திமுக பிரமுகர்கள் மீதான அமலாக்கத்துறை, ஐடி, சிபிஐ நடவடிக்கைகள்?
அரசியல் பழிவாங்கல் -28%
கருத்து இல்லை -31%
சரியானது -41%
4.விஜய் அரசியல் எப்படி?
அருமை- 24%
சினிமா கவர்ச்சி- 34%
இனி தான் தெரியும் - 42%
5.விஜய் என்ன நிலைப்பாடு எடுக்க வேண்டும்?
காங் கூட்டணி - 12%
அதிமுக பாஜ கூட்டணி - 30%
தனித்து போட்டி -58%
6.சிறப்பாக செயல்படக்கூடிய எதிர்க்கட்சி?
நாதக -13%
பாஜ -14%
தவெக -22%
அதிமுக -51%
7. சிறப்பாக செயல்படும் எதிர்க்கட்சித் தலைவர்?
பிறர் -6 %
நயினார் நாகேந்திரன் -8%
சீமான்-13%
விஜய்-21%
இபிஎஸ்-52%
8.உங்களுக்கு பிடித்த முதல்வர் வேட்பாளர்?
பிறர்- 7 %
சீமான்-9%
விஜய்-24%
ஸ்டாலின்-27%
இபிஎஸ்-33%
9.இன்று தேர்தல் நடந்தால் யார் வெற்றி பெறுவார்
நாம் தமிழர்-7%
தவெக -22%
திமுக கூட்டணி - 33%
அதிமுக - பாஜ கூட்டணி - 38%
இந்த மாதத்தில்,மக்கள் மனநிலை எப்படி உள்ளது என்பது புரிந்ததல்லவா! தேர்தல் தேதி நெருங்க நெருங்க மக்களின் மனநிலை எப்படி இருக்கும் என்பதற்கான கணிப்பு, தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன் வெளியிடப்படும்.
நேற்று வெளியான கருத்துக்கணிப்பை படிக்க கிளிக் செய்யவும்:
https://www.dinamalar.com/news/tamil-nadu-news/dinamalar---chanakya-election-poll-exciting-information/4136304
இதன் நேரலையை பார்க்க
https://www.youtube.com/watch?v=VJly9Ichnqs
Advertisement
Waste exercises. Sample is very, very small. Not true representative of the total population. Questions asked are one sided. closed mind questionnaire. really true waste.
கருத்து கணிப்பு நடத்தினால் அக்ரகாரத்தில்தான் நடந்திருக்கும், இப்படித்தான் கணிப்பு முடிவு வரும். பொது மக்களிடம் கேட்டால் தெரியும், யாருக்கு வாய்ப்பு ன்று

இது என்னப்பா போங்கு கருத்து கணிப்பாக இருக்கு , திமுக கூட்டணிதான் வெல்லும் என அனைவருக்கும் தெரியும். ஊரை கெடுத்துவரும் எடுப்ஸ் , சங்கி கூட்டம், தற்குறிகள் டெபாசிட் இழப்பது உறுதி