கடந்த தேர்தலின் போது, திமுக.,வினர், வாய்க்கு வந்ததை வாக்குறுதிகளாக அள்ளி வீசினர். நீங்களும் நம்பி வாக்களித்தீர்கள்.
மோசமான சாலை, வழிந்தோடும் சாக்கடை, அரசு அலுவலகங்களில் பணியாளர் பற்றாக்குறை, ஆட்டம் காணும் அரசு போக்குவரத்து துறை, ஆசிரியர் இல்லா அரசு பள்ளிகள் என எதுவும் மாறவில்லை.
கள்ளச்சாராயம், கஞ்சா, போதை, கல்வி நிலையங்களில் கூட பெண்கள் மீதான பாலியல் தாக்குதல் என சந்தி சிரிக்கிறது சட்டம் ஒழுங்கு.
போராட்டம் நடக்காத நாளே இல்லை எனுமளவிற்கு போராடும் பல்துறைப் பணியாளர்களின் கண்ணீருக்கு சாலையோர மரங்களே சாட்சி.
சம்பிரதாயப்படியே கண்டும்காணாமலும் விடப்பட்ட பிரச்னைக்களுக்குத் தீர்வு காண எழுதுங்கள்... உங்கள் குரலாய் தினமலர் ஒலிக்கும்!
