தேர்தலில் போட்டியிடவில்லை: தவாக வேல்முருகன் அறிவிப்பு
சென்னை: திமுகவில் இருந்து விலகிய தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் சட்டசபை தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்துள்ளார்.
தி.மு.க., கூட்டணியில், கடந்த சட்டசபை தேர்தலில், பண்ருட்டி தொகுதியில், வேல்முருகன் வெற்றி பெற்றார். வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிட வசதியாக நெய்வேலி, பண்ருட்டி ஆகிய தொகுதிகளை தி.மு.க.,விடம் கேட்டார். அதை தனக்கு கட்டாயம் கொடுக்க வேண்டும் என வேல்முருகன் விருப்பம் தெரிவித்தார்.
அது தனக்கு கிடைக்காது என தெரிந்ததும், அதிருப்தியில் வேல்முருகன் கூட்டணியிலிருந்து வெளியேறினார். எனினும், நெய்வேலி தொகுதியில் தனித்தே களமிறங்க முடிவெடுத்து இருக்கிறார் என அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது. இந்நிலையில் இன்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் சட்டசபை தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்துள்ளார்.
Advertisement
கட்சியில் இருப்பதே டோல்கேட் முருகன் மட்டும்தான் . மற்றதெல்லாம் வாடகைக்கு எடுக்கப்பட்ட ரௌடிகள்
என்னடாஇது.. டோல் முருகனுக்கு வந்த சோதனை. டோல் கேட் முருகனுக்கு சீட்டு இல்லன்னு தெரிஞ்ச ஒடனே தீயமுக அமைச்சர்கள் செஞ்ச தப்ப எல்லாம் தமிழ் மக்களுக்கு வெலக்கபோறேங்கறார்..தீயமுக அராஜகம் மக்கள் எல்லாருக்கும் ஏற்கனவே நல்லா தெரிஞ்சிபோச்சு.. நீ ஒன்னும் புதுசா விளக்கி புடுங்கவேணாம் .. தீயமுக கூட்டணி மண்ணை கவ்வுவது உறுதி.. ஒனக்கு தேர்தல் எழவு பணம் மிச்சம்னு நிம்மதியா தூங்கு

திராவிடம் வச்ச ஆப்பு