சமூகநீதி வேடம் போடும் முதல்வர் ஸ்டாலின்
தமிழகத்தில் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தாமல், வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட காரணமான முதல்வர் ஸ்டாலின், சமூகநீதி குறித்து பேசுவது, சாத்தான் வேதம் ஓதுவதற்கு ஒப்பானது.
வன்னியருக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு, 1,423 நாட்களாகியும், வன்னியர் இட ஒதுக்கீட்டு சட்டத்தை நிறைவேற்றவில்லை.
இந்தியாவின் பல மாநிலங்களில், ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்திய நிலையில், தமிழகத்தில் மட்டும் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை தி.மு.க., அரசு நடத்தவில்லை. சமூக நீதிக்கு துரோகத்தை மட்டுமே செய்த முதல்வர் ஸ்டாலினுக்கு, சமூக நீதி குறித்து பேச எந்த உரிமையும் இல்லை. வன்னியர் உள் இட ஒதுக்கீட்டை ஒழித்து கட்டிவிட்டு, சமூகநீதி வேடம் போடும் ஸ்டாலினுக்கு, தமிழக மக்கள் மறக்க முடியாத பாடத்தை புகட்டுவர்.
- அன்புமணி
தலைவர், பா.ம.க.,
Advertisement

வாசகர்கள் கருத்துகள்